எஸ்.எம்.எம்.பஷீர்
“தேர்தல்களில் வெற்றிபெறுவது என்று வருகின்ற பொழுது இலட்சியவாதம் நடைமுறைவாதத்திடம் தோல்வியுறுகிறது”
(டானி ஸ்ட்ரோன்- Danny Stron)
இன்று காலையில் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் இடம் பெறுகிறது.. இந்தத் தேர்தல் உலகின் பார்வையை இலங்கை மீது குவியச் செய்திருக்கிறது. மேற்குலக சக்திகளும் , அவர்களின் உந்துதலுடன் இயங்கும் உள்நாட்டு தேசியக் கட்சிகளும் , தமிழ்த் தேசியவாதிகளும் , பெரும்பான்மை முஸ்லிம் மக்களும் மஹிந்த கவிழ்க்கப்பட்டுப் போனார் என்று அசந்திருந்த வேளையில் மஹிந்த ராஜபக்ச சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளாராக அதுவும் பிரதமர் வேட்பாளர் என்று அடையாளப்படுத்தப்பட்டு மீண்டும் ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி இடுகிறார் என்ற செய்தி ஒரு அதிர்ச்சியை அவரின் எதிரிகளுக்கு ஏற்படுத்திய வேளையில் சில தினங்களுக்கு முன்னர் தந்திரோபாயமாக பிரதமர் பதவிக்கு மஹிந்த தெரிவு செய்யப்படுவதை தடுக்கும் வகையில் ஜனாதிபதியே சுதந்திரக் கூட்டமைப்பினதும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் தலைவர் என்ற வகையில் மஹிந்தவுக்கு ஆதரவான இரண்டு அமைப்பின் செயலாளர்களையும் பதவி நீக்கம் செய்ததுடன் அவர்கள் செயற்படாதவாறு மாவட்ட நீதிமன்ற ஆணையைப் பெற்று பிரதமராக மஹிந்த நியமிக்கப்படமாட்டார் என்ற உறுதியையும் வாக்களர்களுக்கு வழங்கியுள்ளார்.