"இலங்கையிலும் தந்திக்கு மூடுவிழா'
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 செப்டம்பர், 2013 - 15:51 ஜிஎம்டி
இந்தியாவை அடுத்து இலங்கையிலும் தந்திச் சேவை
முடிவுக்கு வருகிறது. ஏனைய பல வசதிகள் வந்துள்ள நிலையில், அதன் தேவை அருகி
வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 155 ஆண்டுகளாக தபால் திணைக்களத்தினால் நடத்தப்பட்டு வந்த தந்திச் சேவை இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது.இது குறித்து பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.