ஸ்ரீலங்கா: ராஜபக்ஸ மீண்டும் எழுகிறார்
சிறிசேன ஆட்சியின் மயக்கநிலை மிகவும் உயர்வாக இருப்பது ராஜபக்ஸ குலத்தினருக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பாக உள்ளது.
சிங்கராஜ தமித்தா - தெல்கொட
பாகம் - 1
“உங்களுக்கு
பல்வேறு விஷயங்களை வழக்கமாகச் சொல்லிவிட்டு அதை மூன்று நாட்களுக்குப்
பின்னர் மறந்துபோகும் அந்த ஆட்களைப் போன்றவர்களல்ல நாங்கள்…நாங்கள்
வித்தியாசமானவர்கள் என்
பதை
உலகம் அறியவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் - அதாவது நாங்கள் சொல்வதையே
செய்கிறோம் என்பதை நாங்கள் செயல்படுத்தப் போகிறோம்.” - ஹர்ஷா டீ சில்வா,
ஸ்ரீலங்கா வெளிவிவகார பிரதி அமைச்சர் , ‘த நஷனல் ஜோகிறபிக்’ (நவம்பர் 2016)
இதழுக்கு சொன்னது.
அரசியல்
என்பது ஒரு தலைவரின் வெளிப்படுத்தும் திறமையினால் உருவாக்கப் படுகிறது.
அது முழுவதும் செய்கையிலும் மற்றும் குறித்த இலக்கை அடைவதிலுமே
தங்கியுள்ளது, ‘நீங்கள் சொல்வதையே செய்வது, நீங்கள் செய்யப் போவதையே
சொல்வது” ஸ்ரீலங்காவின் தற்போதைய வெளிவிவகார பிரதி அமைச்சர் சொன்னதின்
பொழிப்புரை இது. அது நல்ல நோக்கங்களை பற்றியதல்ல ஆனால் நல்ல விளைவுகளைப்
பெறுவதைப் பற்றியது. அது வெளியாட்களை மகிழ்விப்பதல்ல, இறுதியாக அது உங்கள்
சொந்த மக்களை மகிழ்விப்பதாக, அவர்களது அபிலாசைகளை திருப்திப் படுத்துவதாக,
அவர்களுக்கு மீள் உத்தரவாதம் வழங்குவதாக, அவர்களைப் பாதுகாப்பதாக மற்றும்
அவர்களின் நலன்களை முன்னேற்றுவதாகவும் இருப்பதே ஆகும். ஸ்ரீலங்கா அரசியலில்
ஒரு விடியல் ஆரம்பமாகிவிட்டது என்பது அடிப்படையான ஒரு உண்மை.