கல்வி அமைச்சின் புதிய செயலாளர் யார் தெரியுமா?



K.Kapila C.K. Perera
Professor of Mechanical Engineering, University of Moratuwa
தனது மகனுடன் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய உபவேந்தர்!
மத்தேகொடை வித்தியாதீப மத்திய மகாவித்தியாலய சா.த. பரீட்சை நிலையத்திற்கு முன்னால் கடந்த 12ம் திகதி ஒரு மோட்டார் வண்டி வந்து நின்றது. அந்நாளில் நடைபெற்றது க.பொ.த. சா.த. தமிழ்மொழி பரீட்சையாகும். மோட்டார் வண்டியிலிருந்து இறங்கி வந்தது தந்தை-மகன் இருவருமாகும். அவர்கள் இருவரில் ஒருவர் நுழைவாயில் பாதுகாப்பு அதிகாரியினால் நிறுத்தப்படுகின்றார்.
இது ஒரு பரீட்சை நிலையமாகும். உங்களுக்கு உள்ளே செல்வதற்கு அனுமதியில்லை. பரீட்சைக்கு தோற்றும் மகனை மாத்திரம் உள்ளே அனுமதிக்கலாம் எனக் கூறினார். அவர் அப்படிக் கூறியது பிள்ளைகள் அல்லாது பெற்றோர்கள் பரீட்சைக்குத் தோற்றுவது பற்றி அவர் அறிந்திருக்கவில்லை என்பதனாலாயிருக்க வேண்டும்.

முடிவற்றஅரசியலமைப்பு அரசியலமைப்புத்திருத்தங்களும் தீராத பிரச்சனைகளும்

  
1978 செப்டம்பர் 7 இல் அறிவிக்கப்பட்ட இலங்கையின் புதி 1978 ய
அரசமைப்புச் சட்டத்தில் இன்னுமொரு திருத்தத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில், புதிய அரசாங்கம் அவசர அவசரமாக களமிறங்கியுள்ளது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி நிறுவப்பட்டு, நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெறுவதற்கு முன்னரே, 19ஆவது திருத்தத்தை நீக்கும் உத்தேச 20ஆவது திருத்தச்
சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான அமைச்சரவை அனுமதி
பெறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாட்டிற்கும் அரசியலமைப்பு என்பது அனைத்துச்
சட்டங்களுக்கும் அடிப்படையானது. ஏனெனில் அதுவே முழுமையாக ஒரு அரசினை செயற்படுத்தும் கருவியாக இருப்பதோடு, ஒவ்வொரு அரசும் முழு நாட்டையும் ஆட்சி செய்வதற்கு ஏற்றவகையில் ஒற்றையாட்சி அல்லது சமஷ்டியாட்சி அரசியலமைப்பாகவும் அமைந்துள்ளது. இதன்படி இலங்கையில் இதுவரையில் ஏற்படுத்தப்பட்ட சகல அரசியலமைப்புகளும்
திருத்தங்களும் ஒற்றையாட்சித் தன்மையையே கொண்டுள்ளன.

மாகாண சபைகளுக்கான தேர்தல் உடன் நடத்தப்பட வேண்டும்!


2020 ஓகஸ்ட் 05ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து இலங்கையில் ராஜபக்சாக்கள் தலைமையிலான மிகவும் பலம் வாய்ந்த அரசாங்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இப்படியான ஒரு பலமான அரசாங்கம் அமையும் என இலங்கை மக்கள் முன்கூட்டியே எதிர்பார்த்திருந்தாலும், ராஜபக்சாக்கள் இவ்வளவு பெரிய வெற்றியை ஈட்டுவார்கள் என மேற்கு நாடுகள் ஏன் அயல் நாடான இந்தியா கூட எதிர்பார்த்திருக்கவில்லை.
2015இல் மேற்கு நாடுகள் முன்னின்று இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் வரை, மகிந்த ராஜபக்ச தலைமையில் இருந்த அரசுக்கெதிராக சர்வதேச அரங்கில் பலவிதமான பாரதூரமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்ததுடன், அதன் அடிப்படையில் தன்னிச்சையாக நடவடிக்கை எடுப்பதில் முனைப்பும் காட்டின. அவற்றின் அந்த செயல்பாடுகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவும் வழங்கின.

Prabhakaran ordered Rajiv’s killing: Solheim

Former Norwegian peace negotiator Erik Solheim, in a series of tweets, revealed that LTTE Leader Velupillai Prabhakaran had ordered the killing of former Indian Prime Minister Rajiv Gandhi.
Erik Solheim - Wikipedia
Photo Eric Solheim  -Courtesy: Wikipedia 
Solheim said that during discussions he had with LTTE peace negotiator Anton Balasingham, the latter had admitted that Prabhakaran ordered the killing of Rajiv Gandhi.
Rajiv Gandhi was assassinated by an LTTE suicide bomber in May 1991.
“Balasingham told me Prabhakaran admitted to the killing of Rajiv Gandhi in their private discussions. Bala was not in the slightest doubt as to who ordered the attack. Bala never lied to me. I see no reason why he would have lied on this,” Solheim tweeted.

Millions of Indian workers strike to protest attacks by Modi government amid COVID-19 pandemic By Wasantha Rupasinghe


Expressing the growth of popular anger towards the anti-worker policies of the government of Prime Minister Narendra Modi and its ruinous mishandling of the COVID-19 pandemic, millions of workers have joined strikes and protests in recent weeks to oppose the government’s attacks on their wages and working conditions.
Millions of scheme workers, mainly Accredited Social Health Activists (ASHA) and those attached to the Anganwadi network (rural child care centres that are part of the Indian public health care system), took part in a three-day strike from August 7 to 9. Workers were opposing draconian changes to labour laws and disinvestment in and privatization of PSUs (Public Sector Units). They also demanded the transfer of 7,500 rupees to the bank accounts of all non-income tax paying families for six months, financial aid for farmers, a halt to retrenchments and closures, the payment of lockdown wages and the reinstatement of workers thrown out of work during the lockdown, and the provision of all families with subsidized grain and other foodstuffs.

கரும்புத் தோட்டத்தின் இரும்பு மனிதன்! –லாரன்ஸ் விஜயன்


fidel-castro-birthday-special
கொரில்லா போர் முறையால், கியூபாவின் பாடிஸ்டா ஆட்சியை வீழ்த்தி, அமெரிக்காவின் காலனி ஆதிக்கத்தை வீழ்த்திய சோசலிசப் புரட்சியாளர், கியூபாவின் முன்னாள் அதிபர், இறுதிநாள் வரை ஏகாதிபத்திய எதிர்ப்பை நெஞ்சில் நெருப்பாக எரியவைத்து, கியூபாவை தன்னாட்சி, தன்னிறைவு பெற்ற நாடாக உயர்த்திக் காட்டிய ஃபிடல் என்ற போராளியின் பிறந்த நாள் ஓகஸ்ட் 13, 1926.
“நீங்கள் ஒரு குற்றவாளியைப் பிடித்து விசாரணை செய்வதற்கு முன்னர், உங்களால் குற்றவாளியாக கருதப்படும் அவன் எத்தனை காலம் வேலை இல்லாமல் இருந்தான் எனக் கேட்டதுண்டா? ‘உனக்கு எத்தனைக் குழந்தைகள்? வாரத்தில் எத்தனை நாட்கள் உனது குடும்பத்தினருடன் உணவு உண்பீர்கள்? எத்தனை நாட்கள் பட்டினி கிடந்தீர்கள்?’ என்றெல்லாம் அவனிடம் கேட்டதுண்டா? அவனின் சூழ்நிலை பற்றியாவது விசாரித்ததுண்டா? இவற்றைப் பற்றி எதுவும் அறியாமல், அவனைச் சிறையில் தள்ளி விடுகிறீர்கள். ஆனால், மக்களின் உரிமைகளைச் சுரண்டுபவர்களை ஒரு நாள்கூட சிறையில் தள்ள மாட்டீர்கள். இதுதான் உங்கள் 
சட்டம்”

புதிய அரசாங்கத்துக்கும் தமிழர் தரப்புக்கும் முன்னால் உள்ள பொறுப்புக்கள்-கே.மாணிக்கவாசகர்


கஸ்ட் 05ஆம் திகதி நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன 145 உறுப்பினர்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதற்கு 05 உறுப்பினர்கள் பற்றாக்குறையாக இருந்தபோதிலும் அரசுக்கு ஆதரவு வழங்கக்கூடிய வேறு சிறிய கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் இருப்பதால் அரசுக்கு அதைப் பெறுவதில் எந்தச் சிக்கலும் இல்லை.
தற்போதைய அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதால் அது தான் விரும்பியதைச் சுலபமாக நிறைவேற்ற முடியும். அந்த வகையில் அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றது என்பதுதான் தற்போதைய கேள்வி.
தற்போதைய அரசியலமைப்புக்கு 20ஆவது திருத்தம் ஒன்றைக் கொண்டு வருவதுதான் அரசாங்கத்தின் முதல் நோக்கமாகவும் நடவடிக்கையாகவும் இருக்கும் என கருதப்படுகிறது. பெரும்பாலும் செப்ரெம்பர் மாத நடுப்பகுதியில் 20ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிகிறது.
20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதும் இயல்பாகவே முன்னைய ‘நல்லாட்சி’ அரசாங்கம் சமர்ப்பித்த 19ஆவது திருத்தம் செல்லுபடியற்றதாகிவிடும். அந்த திருத்தச் சட்டத்தை மகிந்த ராஜபக்சவும் அவரது கட்சியினரும் ஆரம்பித்தில் இருந்தே எதிர்த்து வந்துள்ளனர். குறிப்பாக அந்தத் திருத்தச் சட்டத்தின் மூலம் இரு தடவைகள் ஜனாதிபதியாக இருந்த ஒருவர் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என வரையறுக்கப்பட்டிருந்தது. அது 2015இல் மூன்றாவது தடவையாகவும் போட்டியிட்ட மகிந்த ராஜபக்சவை குறி வைத்தே கொண்டு வரப்பட்டிருந்தது.

எவருக்கும் அடிபணியாது நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வேன்!

➡️ பௌத்தத்திற்கு முன்னுரிமை; எந்தவொரு பிரஜைக்கும் மத சுதந்திரம்
➡️ அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பாதுகாக்கப்படும்
➡️ 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்படும்
➡️ ஒரு நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவுக்கு முதலிடம் வழங்கும் புதிய அரசியலமைப்பு
➡️ அமைச்சுக்கள், நிறுவனங்களில் வீண்விரயம் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி
➡️ மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக மக்களிடம் செல்ல நடவடிக்கை
இன்று (20.08.2020) பிற்பகல் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ஆற்றிய உரை வருமாறு,
கௌரவ சபாநாயகர் அவர்களே,
கௌரவ பிரதமர் அவர்களே,
கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே,
கௌரவ அமைச்சர்களே,
கௌரவ இராஜாங்க அமைச்சர்களே,
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே,
தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்து
சபாநாயகர் பதவிக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேபோன்று இன்றைய தினம் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அவர்களுக்கும் குழுக்களின் பிரதித் தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
2/3 வழங்கிய மக்களுக்கு நன்றி
ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் இலங்கை தேர்தல் வரலாற்றில் புரட்சியொன்றை ஏற்படுத்திய ஒரு முக்கிய தேர்தலாகும். ஸ்திரமான ஆட்சியொன்றை ஏற்படுத்துவதற்காக 2/3 அதிகாரத்தை பெற்றுத் தருமாறு நாம் மக்களிடம் கேட்டிருந்தோம்.
வரலாற்றில் முதற் தடவையாக விகிதாசார முறைமையின் கீழ் இடம்பெற்ற தேர்தல் ஒன்றில் 2/3 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் ஆணையை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும் அதன் நட்பு அணிகளுக்கும் பெற்றுத் தந்த நாட்டுப் பற்றுடைய மக்களுக்கு நான் முதலில் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.
சர்வஜன வாக்குப் பலம் நாம் அனைவரும் மதித்துப் பாதுகாக்க வேண்டிய ஜனநாயக உரிமையாகும். எனவே இந்த தேர்தலில் தமது பெறுமதியான வாக்கினை பயன்படுத்திய அனைத்து இலங்கை வாக்காளர்களுக்கும் நான் இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்கிறேன்.

Gotabaya controversially appoints Ali Sabry as Minister of Justice BY ARJUNA RANAWANA


CONTROVERSIAL APPOINTMENT – President Gotabaya Rajapaksa hands over letter to Attorney Mohamed Ali Sabry appointing him Minister of Justice/PMD

Photo : Courtesy : ECONOMYNEXT 

After Sri Lanka’s parliamentary polls, the Rajapaksas have their job cut out by Sathiya Moorthy

  • The SLPP of President Gotabaya Rajapaksa and Prime Minister Mahinda Rajapaksa won a two-thirds majority to effect constitutional reforms
  • The West will have to rethink its Sri Lanka strategy, while the country will have to choose the straight and narrow path with China and other countrie
Wednesday’s 
parliamentary polls
 have reaffirmed 
Sri Lanka
’s faith in the ruling Rajapaksa government. However, the electoral decimation of the United National Party (UNP), the nation’s “grand old party”, and the weakening of the Tamil National Alliance (TNA), have a message, especially for the West, which now has to rethink its Sri Lanka strategy.
With the support of two Tamil allies who strategically contested alone, the Rajapaksa-led ruling Sri Lanka Podujana Party (SLPP) now has a total of 151 MPs, including Speaker, in the 225-member Parliament, giving it a 
two-thirds majority
 to effect promised constitutional reforms aimed at restoring executive power that was haphazardly diluted by the previous government, in office from 2015-19.
Despite two postponements caused by the 
Covid-19 pandemic
, the effective management and containment of the virus – Sri Lanka has had 11 deaths and 2,900 confirmed cases – helped the Rajapaksa imagery in the parliamentary polls even more.

அலி சாஹீரும் (மௌலானா) அரசியல் பச்சோந்தித்தனமும்!

அலி சாஹிர்  ( மௌலானா ),  புலிகளின் மட்டக்களப்பு பொறுப்பாளர் ரமேஷ் வேண்டிக்கொண்டபடிதான் கருணாவை  கொழும்புக்கு கொண்டு வந்தார் ; அவராக கருனாவை கொண்டுவரத்   தீர்மானிக்கவில்லை . உண்மையில்  புலிகளின் கட்டளைப்படியே இவர் அதனை செய்தார்.

கருணாவை கொழும்புக்கு கடத்தி வந்த அலி  சாஹிர் ( மௌலானா ) அமெரிக்காவில் இலங்கை அரசுக்கு எதிராகவும் புலிகளுக்கு எதிராகவும் தனக்கு சர்வதேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகலிடம் தருமாறு அமெரிக்காவில் விண்ணப்பித்து, அந்த விண்ணப்பம் தீர்மானிக்கப்பட முன்னர் ராஜரீய கடவுச்சீட்டு பெறும் பதவி ஒன்றினை ( வெகுமதி ) பெற , மறுபுறம் கருணா பிறிதொரு பெயரில் ராஜீய கடவுச்சீட்டினால் பிரித்தானியாவுக்குள் நுழைந்தமைக்காக தண்டனை பெற்றார். இதனை பற்றி நான் டிசம்பர் மாதம் 2007 ஆம் ஆண்டு  ஆங்கிலத்தில்  ” வெகுமதியும் தண்டனையும் வழங்கும் ராஜதந்திரம்”  ( Diplomacy of Reward and Retribution) என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.

ஒரு நாடு, ஒரே இனம்;  றனில் + அலி சாகிர் மௌலானா

றனில் + அலி சாகிர் மௌலானா


கடந்த இரண்டு வருடங்களில்  இலங்கையில் ஏற்பட்ட அசாத்திய அரசியல் மாற்றங்கள், தகிடுதித்தங்கள் மீண்டும் இன்றைய நிகழ்வுகளுடன் இக்கட்டுரையை எழுத என்னைத்   தூண்டின . இக்கட்டுரை நாயகர்கள் இருவரும் இன்று ஸ்ரீ லங்காவில் இருக்கிறார்கள் அதில் ஒருவர் பிரித்தானியாவிலிருந்து தனது சொந்தப் பெயரில் இலங்கை அரசின் பிரயாண ஆவணம் பெற்று இலங்கை திரும்பி தேசிய நல்லிணக்க அமைச்சராக இருக்கிறார்; மற்றையவர் தனது பதவி காரணமாக புதிய ராஜீய கடவுச்சீட்டுப்  பெற்று இப்போது இலங்கை திரும்பியுள்ளார், அன்று காணப்பட்ட ஊடக கருத்துரைகளின் பிரதிபலிப்பாகவே ஒருவருக்கு வெகுமதி மற்றவருக்கு தண்டனை என்று  அவ்வங்கில   அவ்வங்கிலா  அவ்வங்கிலா தலைப்பிட நினைத்தேன், ஆனால் இன்று இருவருமே வெகுமதி ( Reward ) பெற்றிருக்கிறார்கள்.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...