அண்ணலார்
அமர்ந்திருக்க
அருகே தோழர்கள்
சூழ்ந்திருக்க :
பிரேத ஊர்வலம்
தனைக் கடக்க
எழுந்து நிற்கிறார்
அண்ணலார்
ஏறிய புருவங்கள்,
ஏனோ என விளிக்க
"பிணம் பேதமற்றது!
சடலம் சமயமற்றது !
சங்கை சமத்துவமானது"
எஸ்.எம்.எம்.பஷீர்
அண்ணலாரே ! இது ஒரு யூதனின் ஜனாஸா" என்றோம். அதற்கு நபி ( ஸல்) அவர்கள், 'இவர் மனிதரில்லையா?', ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்" எனக் கூறினார்கள். ( புகாரி ஹதீஸ் 1311-1313 -புத்தகம் 23 )
No comments:
Post a Comment