நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஏராளமான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருப்பதாக ரொய்ட்டர் செய்திச் சேவை
தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரொய்ட்டர் செய்திச்சேவை வெளியிட்டுள்ள செய்தியில் தொடர்ந்தும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னர் கடந்த வருடத்தில் மட்டும் சுமார் மூன்று பில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு முதலீடுகள்
இலங்கையிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில்
மேற்கொண்டிருந்த முதலீடுகளில் 22.4 பில்லியன் ரூபா பெறுமதியான முதலீடுகள் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
வானவில் 63 -மாசி
No comments:
Post a Comment