எஸ்.எம்.எம். பஷீர்
திருடர்கள் இல்லையென்றால்
நான்கு சுவருக்குள்
"திருடர்"கள்
ஜாக்கிரதை"
அறிவிப்பு ஏனோ !
சுவர்களைத் தாண்டி
சுற்று மதிலையும் தாண்டி
சுரண்டும் திருடர்கள்
எத்தனை கோடி !
திருடனைக் கூட
திட்டாமல் தமிழில்
திருடர் என்று
விளிப்பது மேனோ !
திரும்பும் திசையெல்லாம்
திருடர்கள் ஆனபின் ,
திருடர் அறிவிப்பு
இனியும் தேவையோ !
உலகின் ஆட்சியே
திருடர்கள் கைகளில்
என்றானபின்னர்
திருட்டை நம்மால்
ஒழிக்கவா முடியும் !
No comments:
Post a Comment