காலி முகம் - பசுமையில் இருந்து எழுதுவது சி.ஏ.சந்திரபிரேம


2016ல் நடந்ததை நினைவுபடுதினால், கூட்டு எதிர்க்கட்சியினர் கmayday rally 2017ிருலப்பொனயில் நடத்திய மே தின பேரணிக்கு நான் வந்தபோது நேரம் கிட்டத்தட்ட பி.ப 5.00 மணி, தொலைபேசி மூலம் நண்பர்கள் சொன்னது, ஐதேக மற்றும் ஜேவிபி என்பனவற்றின் பேரணிகளுக்கு வந்திருந்த கூட்டம் இரண்டையும் சேர்த்தால் வருவதைவிட அதிகளவு கூட்டம் அங்கு வந்திருந்தது என்று, நான் அவர்கள் சொன்னது எதையும் நம்பவில்லை. பேரணிகள் அதன் உச்சத்தை அடையும் நேரமான பி.ப 4.00 மணியில் இருந்து அந்த இரண்டு பேரணிகளையும் பார்வையிட்டதின் பின்புதான் நான் கூட்டு எதிர்க்கட்சியின் பேரணி நடக்கும் இடத்துக்கு நான் வந்தேன். ஐதேக மற்றும் ஜேவிபி ஆகிய இரண்டுக்கும் வந்த கூட்டத்தை ஒன்று சேர்த்தால் வருவதைவிட பெரிய கூட்டம் எதிர்க்கட்சிக் குழுவுக்கு திரண்டிருந்தது என்று கூறுவதை  அந்த நேரத்தில் சற்று ஆடம்பரமான அறிவிப்பாகவே கருத முடிந்தது. இது விசேடமாக எதனாலென்றால் அந்தக் கூட்டத்தில் நான் கண்ட காட்சிகள் அதை வெளிக்காட்டவில்லை. கிருலப்பொனவில் பங்குபற்றியவர்களில் பெரும்பாலானவர்கள் அந்கிருந்த மேடையின் பக்கம் ஒரு பார்வையைக் கூடச் செலுத்தாமல் சென்றுவிட்டார்கள்.

பேஸ்லைன் வீதியில் சிக்கியிருந்த கூட்டத்தால் மேடை அமைக்கப் பட்டிருந்த திசையில் கூட பார்வையைச் செலுத்த இயலவில்லை, கூட்டம் மிகவும் அடர்த்தியானது ஒருவர் தனது வழியை அதனூடாக தள்ளிக்கொண்டு செல்வது மிகவும் சிரமமான ஒரு முயற்சியாக இருந்தது. நான் அந்தப் பேரணிக்கு கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு அருகாலேயே வந்தேன் ஆனால்  நுகேகொட முடிவு வரை அந்த கூட்டம் எவ்வளவுக்கு நீண்டிருந்தது என்பதை அவதானிக்கும் வகையில் கூட்டத்தை தள்ளிக்கொண்டு செல்ல என்னால் இயலவில்லை. அல்லாமலும் நாரகேன்பிட்டியை நோக்கி பேஸ்லைன் வீதி வழியாக கூட்டம் எவ்வளவு தூரம் நீண்டிருந்தது என்பதையும் என்னால் காண முடியவில்லை. 2016ல் ஐதேக மற்றும் ஜேவிபி பேரணிகளின் மொத்தக் கூட்டத்தை விட கிருலப்பொன பேரணியில் கூட்டம் அதிகம் என்று நான் சொல்லும்போது அது நம்பிக்கையைக் காட்டிலும் நான் எதிர்கொண்டது அதிகமாக இருந்தது, அதைப்பற்றி நான் பத்திரிகைகளிலும் எழுதியிருந்தேன். எவ்வாறெனினும் இந்த முறை காலிமுகத்தில் இடம்பெற்ற பேரணி அதன் சொந்த தரம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. கொழும்பில் நடைபெறும் மே தின பேரணிகள் அனைத்தையும் அவதானிப்பதை நான் வழக்கமாக கொண்டிருந்த போதிலும், இந்த வருடம் அதைச் செய்வதற்கு அவசியம் ஏற்படவில்லை. காலிமுகத்தில் என்ன நடைபெற்றதோ அதுதான் எல்லாவற்றையும் வரையறை செய்யும் நிகழ்வாக அமைந்திருந்தது.
உண்மையில் மே தினத்துக்கு முதல் நாளான ஞ}யிறு அன்று, கூட்டு எதிர்க்கட்சியால் காலிமுகத்தை கூட்டத்தால் நிரப்ப முடியுமா என்பதை கணிக்கும் முகமாக நான் நான் காலிமுகத் திடல் வழியாக வாகனத்தை செலுத்திச் சென்றேன், எனது சொந்தக் கணிப்பு அவர்களால் அதைச் செய்ய முடியாது என்பதாகவே இருந்தது. இந்த கணிப்பு காலிமுகத் திடலை மட்டுமே கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டது, கடலோரம் வழியாக உள்ள பரந்த நடைபாதை மற்றும் காலிவீதியின் அருகாமை என்பனவற்றை தவிர்த்து காலிமுக புல்தரையை மட்டும் கவனத்தில் கொள்ளப்பட்டது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். ஆனால் மே தினத்தன்று நாங்கள் கண்ட நிகழ்வு இந்த நாட்டில் வேறு எவரும் கண்டிராத ஒன்று. காலிமுகத் திடல், கடலோரம் மற்றும் பிரதான வீதி அருகாக உள்ள பரந்த நடைபாதை முழுவதும் மட்டுமன்றி கடலெனத் திரண்டிருந்த தலைகளை காலிமுக ஹோட்டல் முதல் பண்டாரநாயக்கா சிலைவரை உள்ள சமவெளிப் பிரதேசம் மற்றும் அதற்கு அப்பாலும் காண முடிந்தது. கிங்ஸ்பரி மற்றும் கலதாரி ஹோட்டல் சுற்று வட்டம் வரையான வீதி நெடுகிலும் மக்கள் வரிசையாக நின்றிருந்தார்கள். பிற்பகல் சுமார் 5.00 மணியளவில் அந்தப் பேரணியை பார்வையிடுவதற்காக நான் லோட்டஸ் வீதி வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் இருந்து திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். வழக்கமாக இப்படியான கூட்டங்களில் இருந்து பிற்பகல் 6.00 மணியளவில்தான் மக்கள் வீடு திரும்புவார்கள். இந்த முறை அவர்கள் நேரத்துடன் திரும்பியது எதனாலென்றால் எல்லாமே நேரத்துடன் ஆரம்பமானதால்தான்.
வழக்கமாக பேரணியின் உச்சக்கட்டம் பி.ப 5.00 முதல் பி.ப 6.00 மணி வாக்கில்தான் இடம்பெறும். இந்தமுறை காலிமுக பேரணியின் உச்சக்கட்டம் சுமார் பி.ப 4.00 முதல் பி.ப 4.30 மணி வரை இடம்பெற்றது. இந்த நேரத்துக்குள் விமல்வீரவன்ச மற்றும் மகிந்த ராஜபக்ஸ ஆகியோர் தங்கள் பேச்சை முடித்துவிட்டார்கள், சோர்வடைந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் திரும்பிச் சென்று விடmayday rally 2017-1்டார்கள். மக்கள் நேர காலத்துடன் வெளியேறுவதற்கு சகிக்க முடியாத வெப்பநிலையும் ஒரு காரணம். உண்மையில் பேரணியில் பங்குபற்றிய இரண்டு வயதானவர்கள் நெரிசலில் சிக்கி இறந்துபோனது வழமைக்கு மாறான ஒரு நிகழ்வு. யாராவது நசுங்கியோ அல்லது மூச்சுத் திணறியோ மரணமடைந்திருந்தால் அது கடந்த வருடம் கிருலப்பொன கூட்டத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும், அங்குதான் கூட்டம் மிக அடர்த்தியாகவும் நெரிசல் மிக்கதாகவும் இருந்தது, ஒருவரால் அதை தள்ளி முன்னேற முடியாமல் இருந்தது. மறுபுறத்தில் காலிமுகம் திறந்த ஒரு பரந்த வெளி என வரையறுக்கப்படுகிறது. உண்மையில் இந்த நாட்டில் பரந்த திறந்த வெளி பற்றி சாதாரணமாக உரையாடும்போது அதற்கு உதாரணமாக காலிமுகத் திடலையே வரையறை செய்வார்கள். உண்மையில் அப்படியான ஒரு இடத்தில் ஒருவர் நெரிசலில் சிக்கி உயிரிழப்பாரானால் அதன் தெளிவான அடையாளம் உச்சக்கட்ட சமயத்தில் அங்கு எவ்வளவு அடர்த்தியான சனக்கூட்டம் இருந்திருக்கும் என்பதுதான். சுமார் 3.30 மணியளவில் காலிமுக ஹோட்டலின் அருகில் இருந்து நண்பர் ஒருவர் இந்த எழுத்தாளருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இரண்டு அவசர மருத்துவ ஊர்திகள் அங்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார். காலிமுகத்திடலில் அந்த நேரத்தில் கூட்டத்தில் நெரிசல் உச்சக் கட்டத்தை அடைந்திருக்க வேண்டும் ஏனென்றால் காலிமுகத்தின் இரு பக்கத்தில் இருந்தும் அதிகளவான மக்கள் அதை நோக்கி தொடர்ந்து வந்துகொண்டிருக்க வேண்டும்.
பொதுக்கூட்டங்களுக்கு வரும் சனக்கூட்டத்தை வைத்துத்தான் அரசியல் காற்று எந்தப்பக்கம் வீசுகிறது என்பது எப்போதும் கணிக்கப்படும். தங்களின் ஐம்பது வயதுகளின் நடுப்பகுதியில் உள்ளவர்கள் 1977ல் மருதானையில் நடைபெற்ற மே தினக்கூட்டத்தை நினைவு படுத்திப் பார்க்கலாம், அது அந்த நேரத்தில் அனைத்து அரசியல் கூட்டங்களினதும் தாயாகக் கருதப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் மருதானை வீதிகள் இப்போது உள்ளதைபோல அகலமானதாக இருக்கவில்லை. பின்னர் 2015 ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற சமயத்தில், வஜிர அபேவர்தனா இந்த எழுத்தாளருடன் பேசும்போது சிறிசேன வெற்றி பெறுவார் ஏனென்றால் அவரது பேரணிகளுக்கு கூடும் கூட்டம் அதிகரித்து வருகிறது எனக் கணித்துக் கூறினார். அதுதான் விடயம் என்றால் காலிமுக பசுமை வெளியில் எப்போதும் கூடியிராத மிகப்பெரிய ஒரு அரசியல் ஒன்றுகூடல், உண்மையில் பொதுவாக நாட்டிலேயே கூடிய மிகப் பெரிய கூட்டம் வெளிப்படுத்தும் தவறில்லாத செய்தி என்ன? கூட்டு எதிர்க்கட்சியினரால் முன்னோடியில்லாத இந்த அரசியல் அறிக்கையை வெளிப்படுத்த இயலுமாக இருந்தது ஏனென்றால் அரசாங்கம் கூட்டு எதிர்க்கட்சியை குறைவாக எடைபோட்டு காலிமுகத் திடலை அவர்களால் ஒருபோதும் நிரப்ப இயலாது என்கிற எண்ணத்தில் அதை அவர்களுக்கு கொடுத்திருந்தது.
குறிப்பாக அரசாங்கம் இது காட்சிப் படுத்துவதற்காக பல இடங்களிலிருந்தும் ஏற்றி வரப்பட்ட கூட்டம் என்று எண்ணித் தங்களைத் தாங்களே தப்பான நம்பிக்கையில் ஏமாற்றிக்கொள்ளக் கூடாது. அந்த மக்கள் ஒவ்வொருவரும் மகிந்த ராஜபக்ஸவுக்காக உயிரைக் கொடுக்குமளவுக்கmaydayrally-2ு அவரின் தீவிர ஆதரவாளர்கள். அவர்கள் ஆர்வமும் உற்சாகமுமாக இருந்தார்கள். பேரூந்துகள் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருக்கலாம், ஆனால் எந்த பேரூந்து சேவையாலும் இத்தனை பெரிய கூட்டத்தை ஏற்றி வந்திருக்க முடியாது. நான் கூட்டத்துக்கு செல்வதற்கு தாமதித்து விட்டேன் ஏனென்றால் இந்தக் கூட்டத்துக்கு போகும் முன்பு கொட்டாஞ்சேனையில் உள்ள இந்த பத்திரிகை அலுவலகத்துக்கு முச்சக்கர வண்டியில் செல்லவேண்டி இருந்தது, மற்றும் கோட்டைப் பகுதியில் கூட்டம் இருக்காது ஏனென்றால் காலிமுகக் கூட்டத்துக்கான நுழைவாயில் அநேகமாக கொள்ளுப்பிட்டி பக்கமாகத்தான் இருக்கும் என்று எண்ணியிருந்தேன். நான் கோட்டைக்குச் சென்று கோட்டை வை.எம்.பி.ஏ கட்டிடத்துக்கு அருகில் சுடியிருந்த மக்கள் வெள்ளத்தின் நடுவில் சிக்கிக் கொண்டேன், எல்லோரும் லோட்டஸ் வீதி வழியாக காலிமுகத்தை நோக்கி நுழையும் நோக்கத்துடன்; நகர்ந்து கொண்டிருந்தார்கள். வை.எம்.பி.ஏக்கு அருகில் எனது வாகனத்தை கடந்து சென்ற மக்களின் எண்ணிக்கையே ஒரு தனியான மே தின ஊர்வலத்துக்கு போதுமானதாக இருந்தது. பதினாயிரக்கணக்கான மக்கள் அந்தக் கூட்டத்துக்கு முற்றிலும் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே வந்தார்கள் என்பது மிகவும் தெளிவாகத் தெரிந்தது.
அரசாங்கம் கூட்டு எதிர்க்கட்சியினர் போதியளவு கூட்டம் சேராமல் திணறவேண்டும் என்கிற நோக்கில் அவர்களைச் சங்கடத்தில் ஆழ்த்துவதற்காக மேடை எங்கு அமைக்கப்பட வேண்டும் என்கிற அளவிற்கு கூட கட்டளைகளைப் பிறப்பித்திருந்தது, ஆனால் இவை எல்லாம் அவர்களுக்கே எதிராகத் திரும்பியிருந்தன. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டுமா என அது நடத்திய பொது வாக்கெடுப்பைப் போல ஸ்ரீலங்காவில் தீவிரமான ஒரு மைல்கல் வெற்றியாக அமைந்து விட்டது. பிரித்தானியாவில் கன்சர்வேட்டிவ் கட்சி, தொழில்கட்சி, லிபரல் ஜனநாயகக் கட்சி ஏன் ஸ்கொட்லாந்தின் தேசிய கட்சி உட்பட அனைத்து பிரபலமான அரசியல் கட்சிகளும் பிரித்தானியா வெளியேறக்கூடாது என பிரச்சாரம் நடத்திய போதிலும் வெளியேற வேண்டும் என்கிற கோரிக்கையே வெற்றி பெற்றது. அதேபோல ஸ்ரீலங்காவிலும் ஐதேக, ஸ்ரீ.ல.சு.க, மற்றும் ஜேவிபி ஆகிய அனைத்தும் வெளிப்படையாகவே காலிமுகப் பேரணியை எதிர்த்த போதிலும் கூட்டு எதிர்க்கட்சி ஒவ்வொருவரையும் புறந்தள்ளி நிலமையை சமாளித்துள்ளது. எதிர்காலத்தில் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக அவர்கள் உருவாக்கியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன கட்சிக்கு வெறும் ஒரு வயதே ஆகியுள்ளது, இருந்தும்; மக்கள் கூட்டத்தை சேர்ப்பதில் உள்ள சாதனைகள் எல்லாவற்றையும் அவர்கள் ஒருமுறை அல்ல பல தடவைகள் பல இடங்களில் முறியடித்துக் காட்டியுள்ளார்கள். காலிமுக காட்சி இன்னமும் வலிமையான மிகவும் பாராட்டத்தக்க ஒன்றாகும். இந்த நாட்டின் அரசியல் எதிர்காலம் நாட்டிலுள்ள பிரதான அரசியல் கட்சிகளுக்கு வெளியே உள்ள ஒரு அரசியல் சக்தியினால் தீர்மானிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...