எஸ்.எம்.எம்.பஷீர்
அறுபதுகளின் ஆரம்பத்தில் கோட்டமுனையிலிருந்து சென்று கள்ளியங்காட்டில் குடியேறியவர்களுள் அவரின் குடும்பத்தினர்களும் அடங்குவர். அவரோடு சென்ற பலரின் இன மத பிரசன்னம் காரணமாகவே அங்கு முஸ்லிம் கொலனி உருவானது. அந்த வகையில் கள்ளியங்காட்டின் ஒரு பகுதியை முஸ்லிம் கொலனி என்றும் கள்ளியங்காட்டின் மறு பெயரே முஸ்லிம் கொலனி என்று அறியப்படுமளவு வாழ்ந்த சமூகத்தில் ஏழ்மையிலும் பெருமைப்பட வாழ்ந்த மறைந்த மனிதர் பித்தன் ஷா. அங்கிருந்த சாகிரா கல்லூரி, மஸ்ஜிதுல் பிர்தவுஸ் (பள்ளிவாயல்) என சமூக நிறுவனங்கள் அனைத்திலும் அவரின் ஈடுபாடு இறுக்கமாக படர்ந்திருந்தது.
கள்ளியங்காட்டில் இன முறுகலுக்கு , புலியின் இன விரோத செயற்பாடுகளுக்கு அஞ்சி 1990 ஆம் ஆண்டில் தாமே உருவாக்கிய தனக்கு மிக அன்னியோன்னியமான வாழிடத்தை விட்டும் ஏதிலியாக திகாரிய என்ற கிராமத்துக்கு வந்து அங்கு இடம் பெயர்ந்து வந்த அகதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அகதி முகாமிலே தனது இறுதிக்காலம் வரை பித்தன் ஷாவுக்கு இருக்க நேரிட்டது. வட புலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தெற்கின் பல பிரதேசங்களில் இடம்பெயர்ந்தும் அகதி முகாம்களில் , அகதிக் கிராமங்களில் வாழ்ந்தது போல் மறுபுறத்தில் கிழக்கின் பல முஸ்லிம் கிராமங்களிலிருந்தும் மொத்தமாக கிழக்கிலே வாழ்வது பாதுகாப்பல்ல என்று கருதி தெற்கிலே பலர் இடம்பெயர்ந்தனர். அந்த வகையில் கோட்டமுனை , கள்ளியங்காடு -முஸ்லிம் கொலனி- முஸ்லிம்கள் சிலர் அகதியாகி அந்தரித்து முஸ்லிம் கிராமமான திகாரிய உள்ளிட்ட கம்பஹா மாவட்டத்திலுள்ள பல முஸ்லிம் கிராமங்களுக்கு இடம் பெயர்ந்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்
எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...

-
எஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...
-
எஸ்.எம்.எம்.பஷீர் “ ஒரு தவறு பல்கிப் பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு உண்மை ...
-
எஸ் . எம்.எம்.பஷீர் “I give you the end of golden string; Only wind it into a ball, It will lead you in at Heaven’s gate, ...
No comments:
Post a Comment