அலி சாஹீரும் (மௌலானா) அரசியல் பச்சோந்தித்தனமும்!

அலி சாஹிர்  ( மௌலானா ),  புலிகளின் மட்டக்களப்பு பொறுப்பாளர் ரமேஷ் வேண்டிக்கொண்டபடிதான் கருணாவை  கொழும்புக்கு கொண்டு வந்தார் ; அவராக கருனாவை கொண்டுவரத்   தீர்மானிக்கவில்லை . உண்மையில்  புலிகளின் கட்டளைப்படியே இவர் அதனை செய்தார்.

கருணாவை கொழும்புக்கு கடத்தி வந்த அலி  சாஹிர் ( மௌலானா ) அமெரிக்காவில் இலங்கை அரசுக்கு எதிராகவும் புலிகளுக்கு எதிராகவும் தனக்கு சர்வதேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகலிடம் தருமாறு அமெரிக்காவில் விண்ணப்பித்து, அந்த விண்ணப்பம் தீர்மானிக்கப்பட முன்னர் ராஜரீய கடவுச்சீட்டு பெறும் பதவி ஒன்றினை ( வெகுமதி ) பெற , மறுபுறம் கருணா பிறிதொரு பெயரில் ராஜீய கடவுச்சீட்டினால் பிரித்தானியாவுக்குள் நுழைந்தமைக்காக தண்டனை பெற்றார். இதனை பற்றி நான் டிசம்பர் மாதம் 2007 ஆம் ஆண்டு  ஆங்கிலத்தில்  ” வெகுமதியும் தண்டனையும் வழங்கும் ராஜதந்திரம்”  ( Diplomacy of Reward and Retribution) என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.

ஒரு நாடு, ஒரே இனம்;  றனில் + அலி சாகிர் மௌலானா

றனில் + அலி சாகிர் மௌலானா


கடந்த இரண்டு வருடங்களில்  இலங்கையில் ஏற்பட்ட அசாத்திய அரசியல் மாற்றங்கள், தகிடுதித்தங்கள் மீண்டும் இன்றைய நிகழ்வுகளுடன் இக்கட்டுரையை எழுத என்னைத்   தூண்டின . இக்கட்டுரை நாயகர்கள் இருவரும் இன்று ஸ்ரீ லங்காவில் இருக்கிறார்கள் அதில் ஒருவர் பிரித்தானியாவிலிருந்து தனது சொந்தப் பெயரில் இலங்கை அரசின் பிரயாண ஆவணம் பெற்று இலங்கை திரும்பி தேசிய நல்லிணக்க அமைச்சராக இருக்கிறார்; மற்றையவர் தனது பதவி காரணமாக புதிய ராஜீய கடவுச்சீட்டுப்  பெற்று இப்போது இலங்கை திரும்பியுள்ளார், அன்று காணப்பட்ட ஊடக கருத்துரைகளின் பிரதிபலிப்பாகவே ஒருவருக்கு வெகுமதி மற்றவருக்கு தண்டனை என்று  அவ்வங்கில   அவ்வங்கிலா  அவ்வங்கிலா தலைப்பிட நினைத்தேன், ஆனால் இன்று இருவருமே வெகுமதி ( Reward ) பெற்றிருக்கிறார்கள்.



அலி சாஹிர் (  மௌலானா ) வின் அகதி விண்ணப்பம் தீர்மானிக்கப்படாத   நிலையில் அமெரிக்க இலங்கை தூதுவராலயத்தில் ” மினிஸ்டர்” எனப்படும் ராஜீய  தூதர் ஆக பொருளியல் பகுதியில் ( எகனாமிக் ) நியமிக்கப்பட்ட காலகட்டத்தில் இலங்கையை  விட்டு ராஜரீய கடவுச்சீட்டில் ( Diplomatic passport ) பிரித்தானியாவுக்குள் நுழைந்த கருணா மீது பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்தனர்; அதன் விளைவாய் கருணா சிறிது காலம் தடுப்பு முகாமில் (Detention Camp ) வைக்கப்பட்டார். இருவருமே இன்று இலங்கையின் குடிவரவு  குடியகல்வுச்     சட்டத்தின்கீழ்  ராஜீய கடவுச்சீட்டுக்கு உரித்துடயவர்களாக இருக்கிறார்கள்.

அலி சாஹிர்   மௌலானாவின்  அகதி விண்ணப்பம் அமெரிக்க அரசால் தீர்மானிக்கப்படாமல் இருக்கின்றபோது அமெரிக்காவில் உள்ள    இலங்கை தூதுவராலயத்தில் மினிஸ்டர் எனும் பதவியில் மௌலானா   நியமிக்கப்பட்ட பொழுது இலங்கையின் பிரபல ஆங்கிலத்தினசரிகள் இது குறித்து கேள்வி எழுப்பின. செப்டம்பர் மாதம் 2007 ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அறுபத்தி இரண்டாவது அமர்வுகளுக்காக அங்கு சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் குழுவில் சென்றிருந்த ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம் அஸ்வர் அவர்களின் சிபாரிசின் காரணமாகத்தான் அலி சாஹிர் மௌலானாவுக்கு அப்பதவி வழங்கப்பட்டதாக எனது செய்தி மூலங்கள் தெரிவித்தன. இவரது நியமனம் குறித்து தி நேசன் ( The Nation ) எனும் கொழும்பு பத்திரிகை தனது தலைப்புச்     செய்தியில்  “அமெரிக்க அரசும் இலங்கை அரசும் ராஜரீய அமளியில்” (Diplomatic row) என்று தலைப்பிட்டு  மௌலானாவின் நியமனம் குறித்து கேள்வி எழுப்பியபோது, . இலங்கையின் வெளிநாட்டு அமைச்சு அப் பத்திரிகை  தகவல்கள் அடிப்படை  அற்றவை என்றும் ,  இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் இருபத்தி எட்டு டிசம்பர் மாதம் ௨௦௦௭ஆம்  ஆண்டு அலி சாஹீருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ராஜீய   கடவுசீட்டுக்களை வழங்கியதாக  அறிக்கையிட்டனர்.  ஆனால் தி நேசன் பத்திரிகையின் அமெரிக்க செய்தியாளர் தனது செய்தி உண்மையானது என்ற  தனது நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை.

ஆனால்   அலி சாஹிர் மௌலானாவின் நியமனம் அவருக்கு இலங்கை  ராஜீய கடவுச்சீட்டு வழங்கப்பட முன்னரும் , அவரது நியமனம் முறையாக அமெரிக்க அரசுக்கு அறிவிக்கப்பட்டு அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்க ராஜாங்க அமைச்சு தனிப்பட்ட அடையாள அட்டைகளை வழங்க முன்னரும்  ராஜீய அமளி நடைபெற்றது என்று கூறப்பட்டது, அதுவே அன்றைய செய்தியாகவும் இருந்தது. மேலும் இது பற்றி சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ராஜீய செய்தி ஆசிரியர் ( Diplomatic Editor ) கருணாவின் கொழும்பு வெளியேற்றத்தை நிகழ உதவிபுரிந்த அலி சாஹீர்  மௌலானாவை வாசிங்டன் தீ சீ யில் (Washington D C ) உள்ள இலங்கை தூதராலயத்தில் மூன்றாவது உயர்நிலை  ராஜீய பதவியில் நியமித்து வெகுமதி வழங்கியிருந்தது.  அதுவரை அப்படியான நிகழ்வு  எப்போதும் நடக்காத ஒன்றென்றும், ஒருவேளை இதுவே முதல் தடவையாக இருப்பதால் இது கின்னஸ் சாதனையை (Guinness Record )  இலங்கை அரசு செய்திருப்பதாக எழுதி இருந்தார்.

இன்னொருபுறம்  அலி சாஹிர் மௌலானா  வாசிங்டனில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் மினிஸ்டர் ஆக நியமனம் பெற்றபோது இவரது நியமனம் குறித்து அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ரொனால்ட் ரீகனின் சட்டத்தரணி ப்ரூஸ் பைன் ( Bruce Fein ) அமெரிக்காவின் எப். பி. ஐ (F.B.I ) எனும் தேசிய உளவுத்துறைக்கு மௌலானாவுக்கு வழங்கப்பட்ட நியமனம் முறைகேடானது என்று புகார் ஒன்றினை  மூன்றாம் திகதி ஏப்ரல் மாதம் 2008 ல் சமர்ப்பித்திருந்தார். இவரது முறைப்பாட்டில் மௌலானாமீது பல அமெரிக்க தேசிய குடியியல் குற்றவியல் சட்டங்களுக்கு முரணான விதத்தில் அவர் முந்திய பிந்திய விஜயத்தின்போதும் நடந்திருந்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அவரின் புகாரில் பல்வேறு விடயங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதன் முதலில் அலி சாஹிர் மௌலானா அமெரிக்காவிற்கு வந்த பொழுது நடைபெற்ற சம்பவங்களை , அதில் இடம்பெற்ற மோசடிகளை அண்ட் புகார் கொண்டிருந்தது.

இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு தனது காதல் பிரச்சினைகள் காரணமாக சென்ற அலி சாகிர்  1987 அளவில் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு “திரும்பி வந்தபின்னர்” மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் பரீத் மீராலேப்பை மரணமடைந்த இடத்துக்கு எம்.பி ஒருவரை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சி விண்ணப்பம் கோரியபோது பலர் விண்ணப்பித்திருந்தனர் ( தபால் மூல விண்ணப்பம்) அதில்  அலி சாஹிர்  மௌலானாவும்  ஒருவர், ஐக்கிய தேசியக்  கடசியின்  அன்றைய செயலாளர் ஹர்ஷா அபெவர்தனா , கட்சியின் தலைமையகமான   ஸ்ரீ கொத்தாவில் நடத்திய  நேர்முகப்  பரீட்சையின்   பின்னர் ரிஸ்வி சின்னலெப்பை என்பவருக்கு எம்.பி பதவியினை வழங்கினார். இந்த காலகட்டத்தில் நாங்கள் பரஸ்பரம் சந்திக்க நேரிட்டது. அரசியலில் எப்படியாவது நுழைந்துவிடும் தீவிர நோக்கம் அவரிடம் காணப்பட்டது. இவரது இந்த முயற்சி தோல்வியுற்றதும் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் சேர்ந்து 1989 ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார், ஆனால் அவரால் சுமார் இரண்டாயிரம் வாக்குகளை மட்டுமே பெறமுடிந்தது , அதற்கான காரணம் அன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அலையின் முன்னாள் அவரால் நீந்த முடியவில்லை. மௌலானா மக்களால் நிராகரிக்கப்பட்டார், திரும்பவும் கொழும்பில் தங்கி  வாழத் தொடங்கினார்.

1990 ல் புலிகள் ஏறாவூர் முஸ்லிம்கள் மீது நடத்திய  இனப்படுகொலையின் பொழுது  அங்கு மாற்று ஜனநாயக அரசியல் கட்சிகள் யாவும் செயற்படுவது புலிகளால் தடுக்கப்பட்டிருந்த வேளையில் அரசின் தயவிலே –பாதுகாப்பிலே-தான் அங்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் செல்லக்கூடிய நிலைமை காணப்பட்டது , இந்த நிலையில் தான் அலி சாகிர் மௌலானா அன்றைய பாதுகாப்பு அமைச்சருக்கு ஏற்கனவே அறிமுகப்பட்டிருந்தபடியால் அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை ஏறாவூருக்கு செல்ல உடனடியாக அனுமதிக்காமல், அலி சாகிர் மௌலானவை அங்கு அந்த  நெருக்கடியான  நேரத்தில் அனுப்பி முஸ்லிம் காங்கிரசின்  மக்கள் பிரதிநிதிகளை அரசியல் காய் நகர்தல் மூலம் ஒரம் தள்ளி மௌலானாவை செல்வாக்கடையச்  செய்தார்.  ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் அன்றைய தலைவர்  அஸ்ரபோ , கடசியின் மாகாண சபை உறுப்பினர்களோ உடனடியாக  காத்தான்குடிக்கோ ஏறாவூருக்கோ  செல்ல  முடியாத காலகட்டத்தில்  அலி சாஹீர் மௌலானா  அரச விமானத்தில்  அங்கு உடனடியாக  அனுப்பப்பட்டார்.

இது ஐக்கிய தேசியக்கட்சியின் திட்டமிட்ட காய் நகர்த்தலாகும்.  (http://www.srilankaguardian.org/2007/12/diplomacy-of-reward-retribution.html)  இதனால் மௌலானா 1989 ஆம்  ஏறாவூர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் அரசியலில் மீண்டும் புனர் ஜென்மம் எடுத்தார்.  அந்த சம்பவங்களின் பொழுது ஏற்பட்ட உணர்வலைகளை பயன்படுத்தி , தனது அரசியல்   மீதான கட்டுமானங்களை தனது குடும்ப (மௌலானா) ஐதீகங்களுடன் கட்டி எழுப்பினார்,

இதற்கு இவரது குடும்பத்தினர் சகல வழிகளிலும் ஒத்துழைத்தனர். மறுபுறம் முஸ்லிம் சமூகத்தில் சில பகுதியினரால் பேணப்பட்டு வந்த தனிநபர் மத liசமய ச மூக பிறழ்வுகளும் இதற்கு துணை புரிந்தன.



அலி சாகிர் மௌலானா தனது நாடாளுமன்ற  உறுப்பினராகவிருந்த   காலத்தில் புலிகளுடன் மென்மை போக்கை கடைபிடித்தார், அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன ஓன்று இவரது மனைவி மட்டக்களப்பை சேர்ந்த தமிழ் கிறிஸ்தவ குடுமபத்தை சேர்ந்த பெண்மணி, இவர் கிறிஸ்தவ ஒர்தொடாக்ஸ் எனப்படும்  ஆச்சாரமான கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர், இரண்டாவது புலிகளின் ஒத்துழைப்பின்றி அன்று தமிழ் பிரதேசங்களுக்குள் செல்வது வாக்குபெறுவது என்பது கூட புலிகளின் நேரடி அல்லது மறைமுக அனுமதியுடன்தான் முடியும்.



அலி சாகிர் மௌலானாவின் ஒரு பிரத்தியோக பாதுகாவலர்களில் ஒருவர்    1990 ஆகஸ்ட் மாதம் புலிகலின் காத்தான்குடி ஏறாவூர் முஸ்லிம் பொதுமக்கள் மீதான மிலேச்சத்தனமான  படுகொலைகளின் பின்னர் மௌலானாவுடன் செயற்பட ஆரம்பித்த ஏராவூரைச் சேர்ந்த முஸ்லிம் புலி உறுப்பினர்., மௌலானா ஐக்கிய அமெரிக்காவிற்கு தப்பியோடும் வரை அவாது  பிரத்தியேக பாதுகாவலராக  செயற்பட்டார். இன்னுமொருவர் அவரது பிரத்தியேக பாதுகாவலாரகாக பணியாற்றியவர். மௌலானா என்ற சமயம் சார்ந்த குடும்ப வழிமுறை மூலம் வந்ததால் அதனை அவர் இலகுவில் அரசியலில் சந்தைப்படுத்த முடிந்தது. மேலும் அவர் தனிப்பட்டவகையில் ஒரு ஊழலற்ற அரசியல் வாதி என அறியப்பட்டதாலும் அவரது தனிப்பட்ட திருமண வாழ்க்கை பற்றி பெரிதாக ஏறாவூர் மக்கள்   பொருட்படுத்தப்படவில்லை.



மாறாக ,  ஏறாவூர் மக்களின் அந்த 1990  ஆகஸ்ட் மாத மரணச்சடங்குகளில் கலந்துகொண்ட நிகழ்வே இன்றுவரை  அம்மக்களால் நினைவு கூரப்படுவதுடன்; அன்று மௌலானாவுக்கு ஐக்கிய தேசிய கட்சி உருவாக்கிக் கொடுத்த  சந்தர்ப்பமே அவருக்கு பின்னர் ஐக்கிய தேசிய கட்சியை நோக்கி மக்களை நகர்த்த உதவியது. மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் அரசியல் பிரவேசத்தால் இழக்கப்பட்ட  ஐக்கிய தேசிய கட்சி வாக்கு வங்கிகளை தான் நகர்த்திய அரசியல் காய் மூலம் மீண்டும் (   பரீத் மீரலப்பை தேவநாயகம் ஆகியோரின் ஐக்கிய தேசிய கட்சி ) கணிசமான அளவு உள்வாங்க முடிந்தது.



“சத்தியப்பாதை”



இஸ்லாம் மதத்தை பொறுத்தவரை முஸ்லிம்கள் தமது மதத்தை “சத்தியப்பாதை” என்றும சொல்லுவார்கள்; அவ்வாறாயின் ரணில் காட்டிய அரசியல் பாதையை ” சத்தியப்பாதை”   என்று பகிரங்க விளம்பரம் செய்து சென்ற நாடாளுமன்ற தேர்தலில்  (2004) அலி சாகிர் மௌலானா போட்டியிட்டார். ஆனால் சென்ற தேர்தலில் வழக்கமாக அவருக்கு தமிழர்  வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சிக்கு  திரட்டித்தந்த மட்டக்களப்பு வணிகர் சங்கத்தலைவர் சத்திய மூர்த்தி  கூட்டமைப்பினை ஆதரித்ததால் மௌலானா முன்னர் பெற்ற தமிழர் வாக்குகளை பெற முடியவில்லை. எனினும் அவருக்கு தேசியப்பாட்டியலில் எம். பி பதவியினை  ஐக்கிய தேசிய கட்சி  வழங்கியது. தான் கருணா விடயத்தில் ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை தோன்றியதும் இவர் தனது பதவியை ராஜினாமா செய்யும் நிலக்குள்ளானார்,  இன்று ரணில் காட்டியது “சத்தியப்பாதை”யில்லை என்று இவர் இப்போது குற்றம் சாட்டுவதும் இவரது  சுயநல அரசியலை புலப்படுத்துகிறது.





அரசு புலிகள் சமாதான ஒப்பந்தத்திற்கு பின்னர் புலிகளுடன் உள்ள உறவை இவர் வெளிப்படுத்தியது காணக்கூடியதாகவிருந்தது.  இவரது புலி உறவு பற்றி தி சண்டே லீடர் பத்திரிக்கையில்   “மைநோரிட்டி பொலிடிக்ஸ்-சிறுபான்மை அரசியல்-  (Minority Politics)  ஆங்கில பத்தி எழுத்தாளர் ஓமர் கய்யாம் (26th April 1998  ) ” ஹிஸ்புல்லா,  அலி சாகிர் மௌலானா    இரண்டு கால் மிருகத்தினை (புலிகளை)  ஆத்திரமூட்டக்கூடாது என்ற கொள்கையை பரிந்துபேசுவது மாத்திரமல்ல திருகோனமலை  நஜீப் முஹம்துவும் ஒரு குறைந்த அளவில் செயற்படுவதையே தேர்ந்துள்ளார்.”  என்று குறிப்பிடிருந்தார்.

கருணாவுக்கும் புலிகளின் பிரபாகரனின் பிரிவினருக்கும் இடையில் சமரசம் செய்யும் முயற்சிகளை பிஷப் சுவாம்பிள்ளை அவர்கள் முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக துணை வேந்தர்  ரவீந்திரன் மற்றும் தமிழர் தேசிய கூட்டமைப்பினர் சிவில் சமூகமென பல தரப்பட்ட மட்டத்திலும் முயற்சித்தபோதும் , வன்னிக்கு விஜயம் மேற்கொண்டு புலிகளுடன் சமரசம் பேசிய போதும் எதுவும் சரிவராததால், கருணா இலங்கை விட்டு வெளியேறிவிட்டால் நல்லது என்ற அடிப்படையில்தான் ரமேஷ் மௌலானாவை பயன்படுத்தினார்.



இது பற்றி அன்று சமாதான செயலகத்தின் பிரதி பொதுச்செயலாளர் கேதீஸ் லோகநாதன் ( இவர் புலிகளால் பின்னர்  சுட்டுக்கொல்லப்பட்டவர் )  இவர் தனது புனை பெயரான சத்யா என்ற பெயரில் சண்டே டைம்ஸ் (The Sunday Times)  பத்திரிகையில் “அலி சாகிர் மௌலான ரணில் விக்ரமசிங்காவின் நெருங்கிய  நம்பிக்கைக்குரியவர் என்றும் அவ்வாரே அவர் வன்னியை தளமாகக்கொண்ட புலிகளின் தலைமைத்துவத்துடன் அதேயளவு நெருக்கம் கொண்டவர என்றும, அவர் (மௌலானா) தான் மட்டக்களப்பு-அம்பாறை  புலிகளின் தலைவர் ரமேஷின் வேண்டுதலின் படியே கருணாவை வெளியேற்றுவதற்கு  கருணாவுடன் தொடர்புகளை உண்டாக்கியதாக வெளிப்படையாக தெரிவித்திருகிறார்  “என்றும்  எழுதிருந்தார்.  ( “Ali  Zahir Moulana , a UNP National List member of Parliament and close confidant of Ranil wickramasinghe, with equally close contacts with the Vanni-based LTTE leadership , revealed publicly that he had established contacts with Karuna at the request of the LTTTE  Batti-amparai leader Ramesh in order to escort Karuna and his comrades to Colombo as part of a deal aimed at offering Karuna an exit” –Ketesh Loganathan -Sathya).





மௌலானா புலிகளின் மட்டக்களப்பு ரமேஷ் வேண்டிக்கொண்டபடிதான் கருணாவை கொழம்புக்கு கொண்டுவந்ததவர்; அவராக கருனாவை கொண்டுவர    தீர்மானிக்கவில்லை . மொத்தத்தில் புலிகளின் கட்டளைப்படியே இவர் அதனை செய்தார். ஆனால் கருணா பின்னர் தொடர்ந்த புலிகளின் நடவடிக்கைகளும் கருணாவின் அதனை எதிர்த்துநிக்கும்  (மறைந்திருந்தேனும )  செயற்பாடுகளும் அடிப்படையில் தான் தப்பி வர உதவியதற்காக மௌலானாவுக்கு அவர்கடமைப்பட்டுள்ளதாக   கூறியுள்ளார்.  ஆனால் பங்குனி மாதம் 2004ல் சுவாம்பிள்ளை குழுவினர் வன்னி சென்று திரும்பியதும் கருணாவுக்கு  பிரபாகரன் பொது மன்னிப்பு வழங்கவிருப்பதாக   குறிப்பட்டார் ஆனால் கருணா ” அர்ப்பணிக்கப்பட்ட உயிர்கள் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும், ஒருவர் அதனை அர்த்தமுள்ளதாக்குவது என்பது யுத்தத்திலிருந்து விடுபடுவதாகும். நாங்கள் மீண்டும் யுத்தம் செய்வதானால் அதன் அர்த்தம் நாங்கள் மீண்டும் பெறுமதியான உயிர்களை இழக்கப்போகிறோம் என்பதே எனக்கு வழங்கப்படும் பொது மன்னிப்பு என்பது பரிகசியத்திற்குறியது. வடமாகான தலைமத்துவந்தான் எங்களிடம் தாங்கள் எங்களுக்கு இழைத்த  வேறுபடுத்துதல் பாரபட்சங்களுக்காக மன்னிப்பு கோரவேண்டும்.” என்று கருணா அவருக்கு மன்னிப்பு வழங்கும் பிரபாகரனின் உரிமையை நிராகரித்தார்.



தனது அண்மைய பத்திரி்கை நேர்கானலில்  மௌலானா  தனது அரசியல் வெற்றிகளை மட்டுமே  மிகைப்படுத்துபவராக காணப்படுகிறார். திட்டமிட்டே தனது  1989 தேர்தலையும் அதில் அவருக்கு ஏட்பட்ட தோல்வியையும் சவுகரியமாக மறைத்துவிட்டார். பல விடயங்கள் மிகைப் படுத்தப்பட்டிருகின்றன. கருணாவை கொழும்புக்கு கொண்டுவந்த பின்னர் மௌலானா எனக்குத்தெரிந்த முஸ்லிம் பத்திரிகையாளருடன் தொடர்பு கொண்டு முஸ்லிகளை சந்திக்கும் ஏற்பாடுகளை செய்ய முற்பட்டார், அந்த பத்திரிகையாளர் இப்போது ஐக்கிய ராச்சியத்தில் அகதி அந்தஸ்து பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவ்வாறு மேலும் சிலரையும் சந்திக்க வைக்க மௌலானா கூறியதாகவும் இந்த பத்திரிகையாளர் கூறினார். ஆனால் இம்முயற்சிகள் பெரிதும் வெற்றியளிக்கவில்லை.



என்னிடம் இக்கட்டுரையின் முதல் பாகத்தினை எழுதிய பின்னர் என்னிடம் தொடர்புகொண்ட மௌலானாவுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர்  அலி ஷாகிர் மௌலானா , தனது பத்திரிகை பேட்டியில் தன்னை ரமேஷ் சந்தித்தது பற்றி குறிப்பிடாமல் விட்டதனை குறை கண்டு விமர்சித்தார்; இவர் அமெரிக்காவிற்கு ஓடியபின்னர் அங்கிருந்து சென்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்க்ரமசிங்காவிற்கு ஆதரவாக  ஒலிஒளிப்  பதிவு ( காணொளி ) மூலம் ஏறாவூர் மக்களுக்கு ரணில் விக்ரமசிங்காவிற்கு  ஆதரவளிக்குமாறு வேண்டிக்கொண்டார். அவர் இச்செய்தியில் மிகத் தெளிவாக வன்னியிலிருந்தும் , கிழக்கிலிருந்தும் அவரது உதவியை புலிகள் வேண்டிக் கொண்டதாக கூறியுள்ளார்.ஆனால் இப்போது தனது நேர்காணல்களில் பத்திரிகை அறிக்கைகளில் புலிகளின் தொடர்புகள் பற்றி திட்டமிட்டு மறைத்து  வருகிறார். என்னினும் அண்மைக் காலங்களில் அவரது கருணா தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்படுவதனால் புலிகள் வன்னியில் இருந்து வேண்டிக் கொண்டதை நாசூக்காக  அங்கீகரித்துள்ளார். 



மௌலானா தினகரன் - சண்டே  ஒப்சேர்வர்  பத்திரிகை பேட்டி ஒன்றில்  பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“1990களில் புலிகளுக்கும் அரசுக்கும் இடையேயான சமாதான பேச்சு ஆரம்பமானது. அரச தரப்பில் பிரதான சமாதான தூதுவராக அமைச்சர் ஏ. சி. எஸ். ஹமீது நியமிக்கப்பட்டிருந்தார். இந்தக் காலக் கட்டத்தில் கேர்ணல் கருணாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அப்போது எம்.பியாக இருக்கவில்லை. கருணா அம்மானுடன் கரிகாலனையும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.



அமைச்சர் ஏ. சி. எஸ். ஹமீத், பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவின் தலைவராக இருந்த அர்ஜுன அலுவிகாரே ஆகியோருடன் புலிகளைச் சந்தித்தோம். கிழக்கு பல்கலைக்கழகத்தை மீண்டும் திறப்பது தொடர்பாக பேச்சு நடத்தினோம். கருணா உடனடியாக அதற்கு செவிமடுத்தார். புலித் தலைமையின் கவனத்திற்கும் உடனடியாகக் கொண்டு வந்தார். மட்டக்களப்பு விமானப் படைத் தளத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது கிழக்கில் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே ஏற்படும் தப்பபிப்பிராயங்கள் களையப்படுவது குறித்தும் பேசினோம். குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் நிர்வாக நடவடிக்கைகளுக்காக புலிகளால் நியமிக்கப்படுகின்ற முஸ்லிம் ஏஜென்டுகள் தரமானவர்கள் அல்ல. தகுதி வாய்ந்தவர்கள் அல்ல மக்களை மதிக்கத் தெரிந்தவர்கள் அல்ல என்பதை ஏ. சி. எஸ். ஹமீத் சுட்டிக் காட்டியிருந்தார். இதனால் முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாகவும் சுட்டிக் காட்டியிருந்தார். உடனடியாக குறிப்பிட்ட நபர்களை நீக்கவும் தகுதியானவர்களையும் கணம் பண்ணத் தெரிந்தவர்களையும் நியமித்தார். “  (. தினகரன்  08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை)





இவர் கருணா மற்றும் கரிகாலனுடன் சந்திப்புக்களை  மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார் . மேலும் கருணாவை கொண்டு முஸ்லிம் புலிகளின் நிர்வாகங்களை மாற்றியதாக குறிப்பிட்டுள்ளார். அவ்வாறாயின் புலிகளால் ஓட்டமாவடியில் ஜூலை மாதம் 1990  ஆண்டு கொல்லப்பட்ட பத்துக்கு மேற்பட்ட  முஸ்லிம்கள், அதே காலகட்டத்தில் ஏறாவூரில்  புலிகளால் கடத்தப்பட்ட ஏறாவூரின் கொத்தணி அதிபர் தாவூத், மௌலானாவின் நெருங்கிய நண்பரின் தந்தையான அலி முகமது, அவரது மருமகன்  காதியார் கபூர் ஹாஜியார் , ஓட்டமாவடி புஹாரி விதானை போன்ற பிரபலங்களை தனது புலிகளுடனான தொடர்புகள் மூலம் ( குறிப்பாக கருணா மூலம்) விடுவிக்க முடியவில்லை அல்லது முஸ்லிம்கள் பின்னர் ஏறாவூரிலும் காத்தான்குடியிலும் கொல்லப்படாமல் தடுக்கமுடியவில்லை, என்ற கேள்வி இவரது “நேர்காணலை ” வாசிக்கும் போது  நியாயமாகவே எழுகின்றது.



கருனாவைத் தனது பாடசாலைக்காளத்திளிருந்தே தெரியும் என்றும அவருடன் 1990 களில் புரிந்துணர்வை ஏற்படுத்தியதாக கூறும் மௌலானா பலவிதத்தில் புலி -மிருகங்கள்-தொடர்ந்தேர்ச்சியாக முஸ்லிம்கள் மீது 1990 களின் பின்னர் மேற்கொண்ட  இன அழிப்புக்களை  தாக்குதல்களை ,கடத்தல்களை  தடுக்கும் முகமாக கருணாவுடன் தொடர்புகொண்டு தாம அவருடன் எட்டிய புரிந்துனர்வு மூலம் ஏதேனும் முயற்சி எடுத்தாரா ? அது போகட்டும் வாழைச்சேனையில் முஸ்லிம்கள்  மீது 2௦௦2 இல் புலிகள்  தாக்கிய பொழுது தன்னும் இவர் கருணா மூலம் தடுக்க முட்பட்டாரா ? இன்று சுய வெற்றி புராணம் பாடுவதுடன் இவற்றுக்கெல்லாம் காரணம் ரணில் விக்ரமசிங்கா என்று வேறு தி ஐலன்ட் (The Island)  பத்திரிகைக்கு செய்தி விடுகிறார், இது முஸ்லிம்களை பொறுத்தவரை  காதில் பூச்சூடுவதல்ல , குல்லாப்போடுவதாகும்.

இன்னுமொரு முக்கிய சம்பவத்தினை எனது பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன, அதாவது புலிகளை மட்டக்களப்பில் ஏ சி . எஸ் ஹமீத் சந்தித்த பின்னர் வாழைச்சேனை பல நோக்கு கூட்டுறவுச்சங்க கட்டடத்தில் M.P.C.S) முஸ்லிம்களை சந்தித்தபோது பிறேந்திரசேனை ( வாழைச்சேனை) எனும் பகுதியை சேர்ந்த முகமது காசிம் என்பவர் தனது இரண்டு பிள்ளைகளை (உவைஸ் . ஜிப்ரி ) ஆகியோரை புலிகள் ஜனவரி 1990இல் கடத்தி தடுத்துவைத்திருப்பதை விடுவிக்க உதவுமாறு மகஜர் ஒன்றை 27 மார்ச் 1990 ல் சுமார் மூன்று மணியளவில் ஏ சி . எஸ் ஹமீத்திடம் கையளித்தபின்னர் , அமைசசர் ஹெலியில் திரும்பிச்சென்ற பின்னர் அம் மகஜரை கையளித்த அப்பிள்ளைகளின் தந்தையை அன்றைய தினம் சுமார் நான்கு மணிக்கு அம் மகஜரைக் கையளித்தமைக்காக ம் புலிகள் கடத்திக் கொண்டு சென்றனர், அப்பிள்ளைகளின் தாய் தனது எஞ்சிய ஐந்து பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு அகதியாக தெற்குக்கு இடம்பெயர்ந்தார் என்பதை அமைச்சர் ஹமீதோ அல்லது மௌலனாவோ அறிந்திருக்கமாட்டார்கள்.

சூரத்தும்மா என்ற தாய் தனது கணவனையும் இரு பிள்ளைகளையும் புலிகளிடம் இழந்து இடம்பெயர்ந்து அவலமுற மறுபுறம் காத்தான்குடியில் அதே கால கட்டத்தில் மார்ச் மாதம் 1990ஆம்  ஆண்டு எம். ஆசிய உம்மா , எஸ். கலந்தார் உம்மா, எம். மரியாம்பு , எஸ். அமீனா , எம்.எம்.சாஹிலத் உம்மா , கே. எம். நாகூர் உம்மா ஆகிய தாய்மார்கள் தமது பிள்ளைகளான பாசி . அப்துஸ் சலம் , ஹாஜா மொஹிடீன் , பதுர்டீன் , ஜலீல்,  அப்துஸ் சலாம், முஹமது  இக்பால் , சப்ரி ஆகிய இளைஞர்களை புலிகள் கடத்தி கொண்டு சென்றிருந்தனர் , அவர்கள் இது குறித்து ஹமீத் உட்பட அஸ்ரப்  வரை தமது பிள்ளைகளை  மீட்டுத் தருமாறு கோரிக்கை விட்டனர். அவை யாவும் பயன் தரவில்லை.   இவ்வாறு கிழக்கு முழுவதும் முஸ்லிம்கள் ஜிஹாத் உறுப்பினர்கள்  , சந்தேக நபர்கள் , அரச ஆதரவாளர்கள், மாற்றுக்கட்சிக் காரர்கள் என பரவலாக புலிகளால் கடத்தப்பட்டும் கொல்லப்பட்டும்  போனபோது யாருமே ( சகல முஸ்லிம் அரசியல் வாதிகளும் ) ஒன்றும் செய்யமுடியாமல் இருந்த நாட்களில் மௌலானா புலிகளுடன் எத்தகைய தொடர்பை வைத்திருந்தார், அல்லது அவருக்கிருந்த  தொடர்புமூலம் என்ன  சாதித்தார்  என்ற கேள்விகள் சிந்திப்பவர்களுக்கு மட்டுமே  உரியவை. சமாதான காலத்தின்போது 2002 ஆம் ஆண்டு தொடக்கத்தில் புலிகள் முஸ்லிகளை மூதூரிலும் வாழைச்சேனையிலும் கொன்றபோது , அவர்களது சொத்துக்களை அழித்தபோது மௌலானா தமது சத்தியப்பாதை காட்டும் தலைவன் ரணில் விக்ரமசிங்காவை  கோபிக்கவில்லை , குற்றம் சாட்டவில்லை.


அமெரிக்காவில் இவரது இலங்கை தூதுவராலய நியமனம் குறித்து எப் பி ஐ (FBI) எனும் அமெரிக்க உளவு துறைக்கு புகார் ஒன்றினை அதன் தலைவர் ராபர்ட் முவல்ளீர்க்கு  (Robert Mueller) அனுப்பிய  அமெரிக்க சட்டத்தரணி புரூஸ் பைன் (Bruce Fein) புலிகளின் முகவர் நிறுவனங்களின் தூண்டுதலால் இப்புகாரினை சமர்ப்பித்திருந்தாலும் இவர் இதன் உள்ளடக்கத்தை  ஈமெயில்  தொடர்ப்பொன்றில் பிரத்தியோகமாக உறுதிப்படுத்தியதுடன் அதற்கு எதிராக யாரேனும் முன்வந்தால் தான் வழக்கு தொடுப்பதாகவும் சவால் விடுத்திருந்தார். இவரது புகாரில்:-   (http://www.srilankaguardian.org/2008/08/minister-suspected-of-conspiracy-and.html)

“ஏப்ரல் மாதம் 2004  ம ஆண்டு விசா பெற்று ஐக்கிய அமெரிக்காவுக்கு தனது மனைவி இரண்டு குழந்தைகளுடன் வந்தார்.  இவருக்கான விசா வழங்குவதற்கு உத்தரவு அமெரிக்காவிலிருந்து அன்றைய பிரதம மந்திரியான இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரும் காரனமாகவிருந்ததாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தமது புகாரில் இந்நிலையில் இவர் இவ்வாறு அரசுக்கு  எதிராக புகலிடம் கோரியது அகதிகள் சட்டத்தின்படி முறைகேடானதாகும் என்றும் மேலும் தனது மனைவியை

டேவிட் ப்ளூட் (David Fluitt     )  எனும் நபரை சௌகரியத் திருமணம் (Marriage of Convenience)  செய்வித்து  அத்திருமணம் மூலம் அமெரிக்காவில் தனது மனைவி வாழிட உரிமை பெற்றதும் ((Green Card -),  தானும்  -பச்சை அட்டையை பெற்று -   நிரந்தரமாக அங்கு  பெற்று வாழமுடியும் என்ற அடிப்படையில் செயற்பட்டார் என்றும் அவரது மனைவியை திருமணம் செய்தவர் ஒரு தன்னின சேர்க்கையாளர் என்றும் அவரது பார்ட்னரின் (ஆண் துணை)  பெயர் காமினி வீரசேகர என்றும் அவர் மௌலானாவின் இந்த சௌகரிய திருமணத்தை  அமெரிக்க குடிவரவு குடியுரிமை  திணைக்களத்துக்கு  காட்டிகொடுக்கப் போவதாக எச்சரிக்க மௌலானாவும் அவரது மனைவியும் இலங்கைக்கு ஓடிவிட்டார்கள்” என்று இந்தப்புகாரில் புரூஸ் பெஇன் (Bruce Fein) குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது குறித்து இதுவரை மௌலான தரப்பில் எவ்வித கருத்தும் முன்வைக்கப்படவில்லை.


யார் இந்த அலி சாகிர் மௌலானா ? (WHO IS THIS ALI ZAHEER MOWLANA)



Honorable Robert Mueller April 3, 2008
Director
Federal Bureau of Investigation
J. Edgar Hoover Building
935 Pennsylvania Avenue, N.W.
Washington, D.C. 20535-0001

RE: Suspected Conspiracy and Document Fraud Perpetrated by Minister Ali Zaheer Mowlana, Minister in the Sri Lankan Embassy in Washington D.C.

Dear Director Mueller:
I am writing to urge the FBI’s opening of an investigation of Ali Zaheer Mowlana, currently serving as Minister in the Sri Lankan Embassy in Washington, D.C. Convincing evidence suggests Mr. Mowlana, a Sri Lankan national, may have conspired to defraud Immigration and Customs Enforcement in violation of 18 U.S.C. 371 and may have made false statements in violation of 18 U.S.C. 1001. The predicate criminal acts would have stemmed from Mowlana’s application for political asylum in July 2004.

The application allegedly contained the material false claim that Mowlana held a well-founded fear of persecution based on political opinion either by the Government of Sri Lanka (GOSL) or the LTTE. See 8 U.S.C. 1101(a)(42). Mr. Mowlana may also be an illegal alien for overstaying his visitor’s visa to travel to the United States that was issued in April 2004. He has remained in the United States for four years while awaiting a decision by Immigration and Customs Enforcement on his asylum petition.

The petition has not been withdrawn. An FBI investigation would not confront immunity issues arising under Article 31 of the Vienna Convention on Diplomatic Relations because Mowlana’s status as Minister has not been formally approved by the State Department. In any event, the Secretary of State is authorized under Article 9 of the Convention to order Mr. Mowlana discharged from the Sri Lankan Embassy for flouting United States civil or criminal laws. Investigating Mowlana is essential to insuring respect for the nation’s immigration laws at a time when violations are notorious.

Background
Mr. Mowlana is neither a stranger to United States immigration laws nor a person of unblemished character. In 1998 or 1999, Mowlana apparently schemed with his wife Thanuja Paiva to consummate a marriage of convenience in the United States with David Fluitt in Santa Clara County, California. Mowlana and his wife coveted a green card for her to secure permanent residency in the United States. While purporting to marry Fluitt, Thanjua Paiva lived with Mowlana as his wife. Fluitt was gay. His partner was a Sri Lankan named Gamini Weerasekera. When the latter threatened to expose the marriage fraud to the Immigration and Naturalization Service, Mowlana and his wife fled to Sri Lanka. Gamini travels between Sri Lanka and the United States, and should be available as a witness.

Mowlana’s Visitor’s Visa-2004

In April 2004, Mowlana and his family received visitor’s visas to the United States with the intercession of the Prime Minister of Sri Lanka Mahinda Rajapaksa, Foreign Minister Lakshman Kadirgamar, and the Sri Lankan Ambassador in the United States. The prologue to the visas speaks volumes about his subsequent asylum petition.

In April 2004, Mowlana was a United National Party (UNP) Member of Parliament. The Sri Lankan Freedom Party (SLFP) had formed a minority government headed by Prime Minister Rajapaksa in coalition with the Marxist, extremist JVP and JHU. Contrary to the wishes of the UNP leadership, Mowlana assisted the flight to Colombo of Karuna, a paramilitary terrorist notorious for kidnapping children for use as soldiers. The Karuna Group had split from the LTTE in mid-March 2004, and had thereby provoked its enmity. When Mowlana’s assistance to Karuna was discovered, he was forced to resign from Parliament by the UNP leader. Shortly thereafter, Prime Minister Rajapaksa, Foreign Minister Kadirgamar, and the Sri Lankan Embassy secured visitor visas for Mowlana, his wife Thanuja Paiva, and his two children. It seems probable that the State Department in Washington, D.C. directed the United States Embassy in Colombo to issue the visas.

Mowlana’s Asylum Petition-2004A few months after his arrival in the United States, Mowlana and his entire family filed petitions for political asylum on or about July 2004. Mowlana’s petition apparently maintained that he feared persecution based on political opinion from either the GOSL or the LTTE. But both theories of persecution seem fabricated. Mowlana did not reside in territory controlled by the LTTE. He had never been an LTTE target. The LTTE had employed Mowlana as an intercessor in the expulsion of Karuna to Colombo. He was a political cipher after his resignation from Parliament whose persecution by the LTTE would have been meaningless. As for the GOSL, its officials had assisted Mowlana in securing visas to travel to the United States. The GOSL had no reason to persecute Mowlana.

He was in good standing with the Sri Lankan armed forces and police. Both had collaborated with him in protecting Karuna. Mowlana’s claim of a well-founded fear of persecution based on political opinion seems clearly concocted in contravention of 18 U.S.C. 1001. That conclusion is reinforced by the fact that incumbent President and former Prime Minister Mahinda Rajapaksa appointed Mowlana through his Foreign Minister to serve as Minister in the Sri Lankan Embassy in Washington, D.C. in December 2007 or January 2008. Finally, if the allegation of persecution were genuine, Mowlana would not have tarried before filing for asylum after reaching the shores of the United States.
President Rajapaksa and Foreign Minister Kadirgamar may have conspired with Mowlana to make a material false statement concerning persecution based on political opinion in his asylum petition to defeat the lawful functions of ICE in violation of 18 U.S.C. 371. The United States Supreme Court endorsed a broad interpretation of section 371 in Haas v. Henkel, 216 U.S. 462 (1909).
Mowlana’s Illegal Alien Status
Mowlana may also be an illegal alien. His visitor’s visa was issued in April 2004. He filed a petition for asylum a few months after his arrival in the United States. But the asylum petition, simpliciter, did not extend Mowlana’s visitor visa, which expired long ago. Mowlana’s asylum petition has been pending for four years. Tamils for Justice does not know whether ICE suspended deportation of Mowlana pending a final decision on his asylum application.
Conclusion
The United States should not be complacent with Mowlana serving as a Minister in the Sri Lankan Embassy without further vetting. The Minister may have violated the immigration laws by conspiracy and deception. The American people are deeply skeptical of the government’s immigration enforcement efforts. That skepticism will be compounded if Mowlana’s suspected immigration crimes or illegal alien status are ignored. A Minister serving in an Embassy who has committed immigration crimes would be either a farce or a spectacle. Mowlana’s seeming attempt to abuse asylum is especially troublesome because it casts a cloud over worthy asylum petitions, which are often difficulty to substantiate. Moreover, Mowlana’s flirtation with Karuna, a terrorist currently imprisoned in Great Britain for passport fraud, militates against his presence in the United States as a Minister harbored in the Sri Lankan Embassy.
I am available to provide more information to the FBI to assist the investigation of Mowlana on request.
Sincerely,
Bruce Fein.
Attorney for Tamils for Justice,
Post Office Box 65450,
Washington,
D.C. 20006
Phone: 703-963-4968, FAX: 202-478-1664; Email: bruce@thelichfieldgroup.com :


இவ்வாறு முஸ்லிம் அரசியல்வாதிகளின் பல பல தீர்க்க தரிசனமற்ற தவறுகளுக்கும்  நேர்மையீனத்திற்கும்   சமூகம் பாவமாக பலியாகிப போயிருக்கிறது.   இன்னுமொரு  உதாரணமாக   குறிப்பிடுவதென்றல் இந்திய சமாதானப் படை காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்  கட்சியாக வட -கிழக்குக் மாகாண சபையில் இருந்தபோது சிவில் தொண்டர் படை என வேலையற்ற முஸ்லிம் காங்கிரசுக்கு உழைத்த அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை ஐ. பி. கே. எப் ( I.P.K.F) பயிற்சிக்கு  சேர்த்தபோது, “ஊருக்குக் ஒரு படை வேண்டும் தம்பி” என்று முஸ்லிம் காங்கிரசின் கட்சிப் பத்திரிக்கையில் மாகாண சபையின் எதிர் கட்சித்தலைவரும் , அன்றைய முஸ்லிம் காங்கிரசின் தவிசாளருமான சேகு இஸ்ஸதீன் கவிதை எழுதி மகிழ்ந்தபோது நான் அவரது கருத்துக்  குறித்து எனது அதிருப்தியை வெளியிட்டபோது, அவரும் ,அபுல் கலாமும்  தங்களது ” முஸ்லிம் படையணி” கருத்தை நியாயப்படுத்தினார்கள்.

அந்த அப்பாவி இளைஞர்கள் பின்னர் கொடூரமாக கொல்லப்பட்டுப்போனார்கள், அவர்களில் ஒரு சிலரின் முகங்கள் எனது நினைவுகளில் இன்றும் சோகமாக வியாபித்திருக்கின்றன. முஸ்லிம் அரசியல் வாதிகள் , குறிப்பாக கிழக்கில் தம்மை சுயவிமர்சனம் செய்ய வேண்டியதை விட்டு விட்டு சுய புராணம் பாடிக்கொண்டிருகிறார்கள், மக்களை “சாய்ந்தால் சாயுற பக்கம் சாயுற மாடுகளாக”  முஸ்லிம் அரசியல்வாதிகள் கணக்கிட்டு அரசியல்   செய்யும் வரை மக்கள் தங்களை சிந்திக்கும் அரசியல் பிரக்ஞை கொண்ட மனிதர்கள் -மன்னர்கள்- என்று நிரூபிக்கும் வரை …….!! இவ்வாறான விமர்சனங்களும் தொடர்ந்து  கொண்டே இருக்கும்.




http://www.srilankaguardian.org/2008/08/minister-suspected-of-conspiracy-and.html



TAMIL TRANSLATION OF THE LETTER


மவ்லானாவின் புகலிடம் மனு -2004

அவர் அமெரிக்காவிற்கு வந்த சில மாதங்களுக்குப் பிறகு, மவ்லானாவும் அவரது முழு குடும்பத்தினரும் ஜூலை 2004 அன்று அல்லது அரசியல் புகலிடம் கோரி மனுக்களை தாக்கல் செய்தனர். கோஸ்ல் அல்லது விடுதலைப் புலிகளிடமிருந்து அரசியல் கருத்தின் அடிப்படையில் துன்புறுத்தலுக்கு அஞ்சுவதாக மவ்லானாவின் மனு தெரிகிறது. ஆனால் துன்புறுத்தலின் இரண்டு கோட்பாடுகளும் இட்டுக்கட்டப்பட்டவை. விடுதலைப் புலிகளால் கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் மவ்லானா வசிக்கவில்லை. அவர் ஒருபோதும் புலிகள் இலக்காக இருந்ததில்லை. கருனாவை கொழும்புக்கு வெளியேற்றுவதில் எல்.ரீ.ரீ.ஈ மவ்லானாவை ஒரு இடைவெளியாகப் பயன்படுத்தியது. அவர் பாராளுமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்த பின்னர் ஒரு அரசியல் மறைக்குறியீடாக இருந்தார், புலிகள் துன்புறுத்துவது அர்த்தமற்றதாக இருந்திருக்கும். GOSL ஐப் பொறுத்தவரை, அதன் அதிகாரிகள் அமெரிக்காவிற்கு பயணிக்க விசாக்களைப் பெறுவதில் மவ்லானாவுக்கு உதவினர். ம ow லானாவை துன்புறுத்த GOSL க்கு எந்த காரணமும் இல்லை.



அவர் இலங்கை ஆயுதப்படைகள் மற்றும் போலீசாருடன் நல்ல நிலையில் இருந்தார். கருனாவைப் பாதுகாப்பதில் இருவரும் அவருடன் ஒத்துழைத்தனர். அரசியல் கருத்தை அடிப்படையாகக் கொண்ட துன்புறுத்தல் குறித்த நன்கு நிறுவப்பட்ட அச்சத்தைப் பற்றி மவ்லானாவின் கூற்று 18 யு.எஸ்.சி.க்கு முரணாக தெளிவாக இணைக்கப்பட்டுள்ளது. 1001. டிசம்பர் 2007 அல்லது ஜனவரி 2008 இல் வாஷிங்டன், டி.சி.யில் உள்ள இலங்கை தூதரகத்தில் அமைச்சராக பணியாற்றுவதற்காக தற்போதைய ஜனாதிபதியும் முன்னாள் பிரதமருமான மஹிந்தா ராஜபக்சா தனது வெளியுறவு மந்திரி மூலம் மவ்லானாவை நியமித்ததன் மூலம் அந்த முடிவு வலுப்படுத்தப்படுகிறது. இறுதியாக, துன்புறுத்தல் குற்றச்சாட்டு உண்மையானதாக இருந்தால், அமெரிக்காவின் கரையை அடைந்த பின்னர் புகலிடம் கோருவதற்கு முன்பு மவ்லானா தங்கியிருக்க மாட்டார்.

ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் வெளியுறவு மந்திரி கதிர்கமர் ஆகியோர் 18 யு.எஸ்.சி.யை மீறி ஐ.சி.இ.யின் சட்டபூர்வமான செயல்பாடுகளை தோற்கடிப்பதற்காக தனது புகலிடம் மனுவில் அரசியல் கருத்தின் அடிப்படையில் துன்புறுத்தல் தொடர்பான ஒரு தவறான அறிக்கையை வெளியிட மொலானாவுடன் சதி செய்திருக்கலாம். 371. அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் ஹாஸ் வி. ஹென்கெல், 216 யு.எஸ். 462 (1909) இல் பிரிவு 371 இன் பரந்த விளக்கத்திற்கு ஒப்புதல் அளித்தது.


பின்னணி


திரு. மௌலானா அமெரிக்காவின் குடிவரவு சட்டங்களுக்கு அந்நியன் அல்ல, களங்கமற்ற தன்மை கொண்டவர் அல்ல. 1998 அல்லது 1999 ஆம் ஆண்டில், கலிபோர்னியாவின் சாண்டா கிளாரா கவுண்டியில் டேவிட் ஃப்ளூய்ட்டுடன் அமெரிக்காவில் வசதியான திருமணத்தை முடிக்க மோவ்லானா தனது மனைவி தனுஜா பைவாவுடன் திட்டமிட்டார். மவுலானாவும் அவரது மனைவியும் அமெரிக்காவில் நிரந்தர வதிவிடத்தைப் பெறுவதற்காக ஒரு பச்சை அட்டையை விரும்பினர். ஃப்ளூட்டை திருமணம் செய்து கொள்ள விரும்பியபோது, ​​தனுஜா பைவா மௌலானாவுடன்  அவரது மனைவியாக வாழ்ந்தார். ஃப்ளூட் ஓரின சேர்க்கையாளராக இருந்தார். இவரது கூட்டாளர் காமினி வீரசேகர என்ற இலங்கையர் ஆவார். திருமண மோசடியை குடிவரவு மற்றும் இயற்கைமயமாக்கல் சேவைக்கு அம்பலப்படுத்துவதாக பிந்தையவர் மிரட்டியபோது, மௌலானாவும் அவரது மனைவியும் இலங்கைக்கு தப்பி ஓடினர். காமினி இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பயணம் செய்கிறார், மேலும் அவர் சாட்சியாக வேண்டும்.

மவ்லானாவின் சட்டவிரோத அந்நியன் நிலை

மவ்லானா ஒரு சட்டவிரோத அன்னியராகவும் இருக்கலாம். அவரது பார்வையாளரின் விசா ஏப்ரல் 2004 இல் வழங்கப்பட்டது. அவர் அமெரிக்காவிற்கு வந்து சில மாதங்களுக்குப் பிறகு புகலிடம் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் புகலிடம் மனு, சிம்பிளிகிட்டர், மவ்லானாவின் பார்வையாளர் விசாவை நீட்டிக்கவில்லை, இது நீண்ட காலத்திற்கு முன்பே காலாவதியானது. மவ்லானாவின் புகலிடம் மனு நான்கு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அவரது புகலிடம் விண்ணப்பம் குறித்த இறுதி முடிவு நிலுவையில் உள்ள மவ்லானாவை நாடு கடத்துவதை ஐ.சி.இ நிறுத்திவிட்டதா என்பது நீதிக்கான தமிழர்களுக்குத் தெரியாது.

முடிவுரை

இலங்கை தூதரகத்தில் அமைச்சராக பணியாற்றுவதில் மவ்லானா மேலும் மனநிறைவு அடையக்கூடாது. அமைச்சர் குடிவரவு சட்டங்களை சதி மற்றும் மோசடி மூலம் மீறியிருக்கலாம். அரசாங்கத்தின் குடியேற்ற அமலாக்க முயற்சிகள் குறித்து அமெரிக்க மக்கள் ஆழ்ந்த சந்தேகம் கொண்டுள்ளனர். மவ்லானாவின் குடியேற்றக் குற்றங்கள் அல்லது சட்டவிரோத அன்னிய நிலை புறக்கணிக்கப்பட்டால் அந்த சந்தேகம் மேலும் அதிகரிக்கும். குடியேற்றக் குற்றங்களைச் செய்த ஒரு தூதரகத்தில் பணியாற்றும் அமைச்சர் ஒரு கேலிக்கூத்து அல்லது ஒரு காட்சியாக இருப்பார். புகலிடத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கான மவ்லானாவின் முயற்சி குறிப்பாக தொந்தரவாக இருக்கிறது, ஏனெனில் இது தகுதியான புகலிடம் மனுக்கள் மீது ஒரு மேகத்தை ஏற்படுத்துகிறது, அவை பெரும்பாலும் நிரூபிக்க சிரமமாக இருக்கின்றன. மேலும், பாஸ்போர்ட் மோசடிக்காக கிரேட் பிரிட்டனில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதியான கருனாவுடன் மவ்லானா உல்லாசமாக இருப்பது, இலங்கை தூதரகத்தில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சராக அமெரிக்காவில் அவர் இருப்பதை எதிர்த்துப் போராடுகிறது.

கோரிக்கையின் பேரில் ம ow லானாவின் விசாரணைக்கு உதவ FBI க்கு கூடுதல் தகவல்களை வழங்க நான் இருக்கிறேன்.

உண்மையுள்ள

புரூஸ் ஃபைன்.

நீதிக்கான தமிழர்களுக்கான வழக்கறிஞர்

தபால் அலுவலக பெட்டி 65450

வாஷிங்டன்

டி.சி. 20006

தொலைபேசி: 703-963-4968, FAX: 202-478-1664; மின்னஞ்சல்: bruce@thelichfilegroup.com






















No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...