வருகிறது – தேர்தல்
வருகிறது
நம் ஐந்தாண்டுத்
தலையெழுத்தை
நிர்ணயிக்க வருகிறது.
அரசியல்வாதிகள்
– இவர்கள்
ஓட்டு வாங்கும்வரை
நீலிக்கண்ணீர்
வடித்துவிட்டு
ஒட்டு வாங்கியவுடன்
நோட்டை சுருட்டுவதிலேயே
நோட்டம் பார்ப்பர்;
நாட்டைக் கவனியார்;
நாட்டு மக்களையும்
கவனியார்.
தொகுதிக்கே வராத,
தொண்டு ஏதும் செய்யாத
ஆவண அரசியல்வாதிகளும்
இங்குண்டு.
பதநீர் பருகியநின்
பனை ஓலைக்கு
என்ன மதிப்பு?
தேநீர் பருகியபின்
காகிதக் கோப்பைக்கு
என்ன மதிப்பு?
ஓட்டு வாங்கியபின்
ஓட்டுப் போட்ட
ஓட்டாண்டிகளுக்கு
என்ன மதிப்பு –
என
எண்ணிக்கொள்ளும்
அரசியல் குள்ளநரிகளே
ஆட்சி தேடி வருகிறார்கள்.
நோட்டு வாங்கிக்கொண்டு
ஓட்டுப் போடும்
ஓட்டாண்டிகளே
! – சில
நோட்டைக் கொடுத்து
நாட்டையே கைப்பற்றிக்கொள்ளும்
நாட்டமுள்ளோர்க்கா
உங்கள் ஓட்டு?
ஒரு ஓட்டைக்
கொடுத்துவிட்டு
ஒரு கோடி நோட்டாக
உருவாக்கிக்கொள்ளும்
ஊழல் பெருச்சாளிகளுக்கா
உங்கள் ஓட்டு?
இந்திய நாட்டுச்
சொத்தையெல்லாம்
– தம்
வீட்டுச் சொத்தாக்கும்
நாட்டமுள்ளோர்க்கா
உங்கள் ஓட்டு?
உங்கள் சொத்தை
எடுத்துத்
தம் உறவினரைத்
தன்வந்தராக்கும்
சுயநலவாதிகளுக்கா
உங்கள் ஓட்டு?
இத்துணை காலம்
சிந்திக்கவே நேரமில்லாமல்
சீரழிந்துவிட்டோம்
இனியாவது
சிந்தித்துச் செயல்படுவோம்
ஏழைகளின்
நண்பனென்று சொல்லி
முதுகில் குத்துவோரைப்
புறக்கணிப்போம்
!
ஏழைகளின்
பாதுகாவலன் எனச்சொல்லி
அவர்களின் வாழ்வையே
வினாக் குறியாக்கும்
வீணர்களைப்
புறக்கணிப்போம்
!
சாதி, மதம் பாராமல்
பொதுத்தொண்டு செய்வோரைப்
பொதுவாய்க் கண்டறிவோம்
!
பொதுத்தொண்டு செய்வோருக்கே
எங்களின் வாக்கு
– எனப்
பொது அறிவிப்புச்
செய்திடுவோம் !
நம் ஒவ்வொரு வாக்கால்
நாளைய இந்தியாவின்
தலையெழுத்தையே
தலைகீழாய் மாற்றிடுவோம்
!
நன்றி :
இனிய திசைகள்
பிப்ரவரி 2014
குறிப்பு: இலங்கை தேர்தல்களையும் நினைவூட்டுகிறது.
No comments:
Post a Comment