எஸ்.எம்.எம்.பஷீர்
மந்தைகள் தவம் செய்தன
மானுடம் பயனுற வாழ்வதற்கே
விந்தை நிகழ்ந்தது
தூர்சீனா மலையின்
அடிவாரம் நடுங்கியது
மலை சுக்குநூறாகியது
மூஸா மூர்ச்சித்தெழந்தார்
மௌட்டீகத்தில்
மீண்டும்
மானுடம் மூழ்கியது !
தட்டுத் தடுமாறி
தடியுடன்
நடந்தவர்
மீண்டும் மனிதரை
மேய்ப்பவரானார்
மனிதரோ
மீண்டெழும்
மந்தையராயினர் !
மாறின காலங்கள்
மேய்ந்த மந்தைகளும்
மேய்ப்பர்களும்
மாறினர் ;
மனிதரோ
மீண்டெழும்
மந்தையராயினர் !
விந்தை மனிதர்கள்
விக்கித்து நின்றனர்
மந்தைக்கும்
மனிதர்க்கும்
இடையில் சிக்கினர் !
மனிதரோ
மீண்டெழும்
மந்தையராயினர் !
மூஸா = மோசஸ்
No comments:
Post a Comment