கனவுகளைக் கலைத்துவிடு !



எஸ்.எம்.எம்.பஷீர்

கனவுகள்
எம்மை
கட்டி வைத்திருக்காவிட்டால்
எப்போதோ
நாம் கரைந்து
போயிருப்போம்!

நனவுகளைப் போலவே
கனவுகளும்
சாஸ்வதமானவை
இரண்டுக்கும்
இடைவெளி
நூல் இழையாயினும்
இருவேறு உலகும்
எமை ஆட்சி செய்யும்!

நெடிய கனவுகள்
கலைக்கப்படாமல்
கண்ணை மூடித்
தூக்கத்தில் கிடக்க,
விழிகளை இருட்டில்
தொலைத்தவனுக்கு
காட்சிகள் யாவும்
கனவன்றி வேறில்லை!

காலம் காலடியில்  
கண்களை திறந்துவிடு
கனவுகளை கலைத்துவிடு
உன் விழிகளின்
வெளிச்சத்திற்காய்
காத்திருக்கிறது உலகு
நனவுகளே  இனி
கனவுகளாக ஆகட்டும். !

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...