மக்கள் மனங்களை வெல்வோம்...

மக்கள் மனங்களை வெல்வோம்...
- தி இந்தியன் எக்ஸ்பிரஸ்,
(“எப்போதும் மக்களுடன் வாழ், மக்களை நேசி, மக்களிடமிருந்து கற்றுக்கொள், அதன்பின்னர் அவர்கள் பிரச்சனைகளுக்காக உரிய போராட்ட வடிவங்களுடன் மக்களிடம் செல்’’ என்கிற பழைய கம்யூனிஸ்ட் பாணியை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யால் கொல்கத்தாவில் நடத்தப்பட்ட ஸ்தாபனம் தொடர்பான சிறப்பு மாநாடு (பிளீனம்), கட்சியை சுயேச்சை யாக வலுப்படுத்திடவும், அதன் வெகுஜனத் தளத்தை விரிவாக்கிடவும் மேற் கொள்ளப்பட வேண்டிய ஸ்தாபன நட வடிக்கைகள் மீது கவனம் செலுத்தியது. 2015 ஏப்ரலில் நடைபெற்ற கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாட்டின் தொடர்ச்சிதான் இந்த சிறப்பு மாநாடு. கட்சியின் கொள்கைகளை உருவாக்கும் உச்ச பட்ச அமைப்பான கட்சி காங்கிரஸ், ஓர் இடதுசாரி ஜனநாயக முன்னணியை, ஓர்உண்மையான அரசியல் மாற்றாக உருவாக்கக்கூடிய விதத்தில், கட்சியின் வலுவைவிரிவாக்குவதற்கான முக்கியத்து வத்திற்கு அழுத்தம் கொடுத்து அரசியல் நிலைப்பாட்டை வடித்தெடுத்தது. கட்சியின் அகில இந்திய மாநாடு, கட்சிஎதிர்நோக்கியுள்ள அரசியல் சவால்கள் குறித்து முழுமையாக விவாதித்தது.

நாட்டின் அரசியலில் ஒரு வலதுசாரி திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. மோடி அரசாங்கம் அமைந்ததற்குப்பின், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அரக்கத் தனமான முறையில் பின்பற்றுவதன் மூலமும், மதச் சிறுபான்மையினர் மீது மதவெறித் தாக்குதல்களைத் தொடுப்பதன்மூலமும் ஒரு வலதுசாரித் தாக்குதல் கட்ட விழ்த்து விடப்பட்டிருக்கிறது. இவ்வாறான இவ்விரண்டு தாக்குதல்களையும் எதிர்த்து முறியடித்திட, ஓர் இடதுசாரி ஜனநாயக மாற்று மேடையை உருவாக்கிஅதன் மூலம் வலுவான இயக்கங்களையும்போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்வதற்கான பணிகள் வகுக்கப்பட்டுள் ளன. எனவே, பிளீனம் இப்பணிகளை மேற்கொள்ளக்கூடிய முறையில் திட்டமிடவும், கட்சி ஸ்தாபனத்தை அனைத்து மட்டங்களிலும் புதுப்பித்திடவும் வேண்டி யிருந்தது.

இத்துடன் மிகவும் முக்கியமான பணியாக பிளீனம் எடுத்துக்கொண்டது, கட்சி உறுப்பினர்களின் தரத்தை அரசியல்ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும், ஸ்தாபனரீதியாகவும் எப்படி முன்னேற்றுவது என்பதாகும். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைப் பொறுத்தமட்டில் கட்சிஉறுப்பினர்களும் அதன் முன்னணி ஊழியர்களும்தான் ஸ்தாபனத்தின் முது கெலும்பாகும். அவர்கள் அரசியல்ரீதியாக உணர்வுமிக்கவர்களாகவும், அர்ப்பணிப்பு உடையவர்களாகவும், தியாகசீலர் களாகவும் இருக்க வேண்டியிருக்கிறது.

இதனைஎய்திட வேண்டுமெனில், கட்சி உறுப்பினர்களில் தொழிலாளர் வர்க்கத்தினரை மட்டுமல்லாமல் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் கொண்டுவரவேண்டும். இவ்வாறு, முதன்முறையாக, கட்சி உறுப்பினர்களாக அதிக அளவில் பெண்களைச் சேர்ப்பதற்கு ஒரு குறியீடு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. தற்சமயம், கட்சி உறுப் பினர்களில் பெண்கள் 15.5 சதவீதமாகும். இது அடுத்த மூன்று ஆண்டுகளில் 25 சதவீதமாக அதிகரிக்கப்படும். கட்சியின் தரத்தை உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றொரு வழி, தொழிலாளர் வர்க்கம், ஏழை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் களிலிருந்து வரும் முன்னணி ஊழியர் களை, கட்சியின் உயர் கமிட்டிகளுக்கு உயர்த்துவதை உத்தரவாதம் செய்வதாகும். இத்துடன், தலித்துகள், ஆதிவாசி கள் மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட இதர பிரிவினர்களிலிருந்தும் முன்னணி ஊழி யர்களை மேம்படுத்துவதற்கு திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொள்வதாகும். கட்சியின் தலித் உறுப்பினர்களுக்குப் பஞ்சமில்லை.

கட்சியின் மொத்த உறுப்பினர் களில் தற்சமயம் 20.3 சதவீதம் பேர் தலித் துகளாவர். ஆனால் அவர்களின் எண்ணிக் கை மத்திய மற்றும் உயர் கமிட்டிகளில் ஒப்பீட்டளவில் குறைவு. எனவே, சமூகரீதியாக புறக்கணிக்கப்பட்ட பிரிவினரி லிருந்து முன்னணி ஊழியர்களை மேம் படுத்துவதற்கு, உணர்வுப் பூர்வமாகத் திட்டமிட வேண்டியது அவசியத்தேவை.கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த தாராளமயம் மற்றும் உலகமயக் கொள்கைகளுக்குப்பின்னர் சமூகப் பொரு ளாதார நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங் களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்இடதுசாரிகளும் பொதுவாகப் பின்தங்கி விட்டனர். குறிப்பாக இந்த மாற்றங்களின் விளைவாக மத்திய தர வர்க்கத்தினரும் இளைஞர்களும் கடுமையாகப் பாதிப்புக்குஉள்ளானார்கள். தாராளமயக் கொள்கை கள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, இதற்கு எதிராக எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று மத்தியத்தர வர்க்கத்தி னருக்கும் இளைஞர்களுக்கும் இடது சாரிகள் வேண்டுகோள் விடுத்தார்கள்.

ஆனால் அந்த வேண்டுகோள் எடுபட வில்லை. இதற்கு இரு காரணங்களைக் கூறலாம். முதலாவதாக, மத்திய தரவர்க்கத்தினருக்குள்ளேயே வித்தியா சங்கள் எழுந்துள்ளன. அதிக வருமானம் பெறக்கூடிய உயர்நிலையை எட்டியுள்ள மத்தியத்தர வர்க்கத்தினரின் வாழ்நிலை சமூகத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களின் வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக மாறியிருக்கிறது. நவீன தாராளமய முதலாளித்துவம் தங்களுக்குப் பயன் அளித்திருப்பதாகவே அவர்கள் பார்க் கிறார்கள். எனவே, இடதுசாரிகளின் கொள்கைகளோ, திட்டங்களோ அவர்களுக்கு சம்பந்தம் இல்லாத வைகளாக மாறிவிட்டன. இரண்டாவதாக, மத்தியதர வர்க்கத்தினரின் இதர பிரிவினரின் வாழ்க்கையிலும் பெரிய அளவிற்குமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இடதுசாரி களால் அவற்றின்மீது முறையாக கவனம் செலுத்தப்படவில்லை. இடதுசாரி அமைப்புகள் பழைய பிரச்சனைகளின் மீது, பழையபாணியிலேயே இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மாறியுள்ள சூழ் நிலையில் புதிய பாணியை உருவாக்கிக் கொண்டு அவர்கள் பிரச்சனைகளைக் கையில் எடுத்துக்கொள்ளவில்லை. அவ்வாறே இளைஞர்களைப் பொறுத்தும்,இடதுசாரிகள் தங்கள் கொள்கைகளையும் திட்டங்களையும் மாற்றி அமைத்துக் கொண்டு, அவர்களின் ஆசை அபிலா சைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அவ்வாறு செய்துள்ள இடங்களில் அது வெற்றி பெற்றிருக் கிறது. ஆனால் பொதுவாக இவர்களின்பிரச்சனைகளும் பெரும்பாலான பகுதி களில் கண்டுகொள்ளப்படாமல் விடப் பட்டிருக்கின்றன. பிளீனம் இவ்வாறு மத்தியத்தர வர்க்கத்தினர் மற்றும் இளைஞர்களின் இப்பிரச்சனைகளை எல்லாம் ஆழமாகப்பரிசீலித்தது. நகர்ப்புற மத்தியத்தர வர்க்கங்களின் மத்தியில் வேலைகளைமுடுக்கிவிட துல்லியமான நடவடிக்கை கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.

கட்சியின் இளைஞர்கள் எண்ணிக்கை (31 வயதுக்குக் குறைவாக உள்ளவர்கள்) 20 சதவீதத்தினைச் சுற்றியே இருந்து கொண்டிருக்கிறது. கட்சியின் அனைத்து மட்டங்களிலும் இளைஞர்களையும், பெண்களையும் தெரிவுசெய்து மேம்படுத் திட உரிய வழிகாட்டுதல்கள் பிளீனத்தில் வரையப்பட்டிருக்கின்றன. பிளீனத்தில் மிகவும் முக்கியமானமுழக்கம் ஒன்று முன்வைக்கப்பட்டிருக் கிறது. அது, மக்களுடன் உயிர்த்துடிப்புடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதாகும். இது ஆங்கிலத் தில் மாஸ் லைன் (mass line) என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன்புவரை,தேர்தல் சமயங்களில் மட்டுமே மக்களுடன் அவ்வாறான தொடர்புகளை நாம் கொண் டிருந்தோம். “எப்போதும் மக்களுடன் வாழ், மக்களை நேசி, மக்களிடமிருந்து கற்றுக்கொள், அதன்பின்னர் அவர்கள் பிரச்சனைகளுக்காக உரிய போராட்ட வடிவங் களுடன் மக்களிடம் செல்’’ என்கிற பழையகம்யூனிஸ்ட் பாணியை மீண்டும் ஏற்படுத் திக் கொள்ள வேண்டியிருக்கிறது. எங்கே உள்கட்சி ஜனநாயகம் வீர்யத்து டன் இருக்கிறதோ அங்குதான் கட்சியைத் தரமானதாக மேம்படுத்திட முடியும். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டு மல்ல, கட்சி அடிப்படையிலான நாடாளு மன்ற ஜனநாயக அமைப்பிற்கும் முக்கியமாகும். நவீனதாராளமய அரசியல் ஜனநாயகமுறையை மேலும் சிக்கலாக்கி இருக்கிறது, கட்சிகளுக்குள் ஏற்கனவே இதனை மிகவும் சுருக்கிவிட்டது. பல கட்சிகள் ஒரேதலைவரைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கின் றன அல்லது குடும்ப எண்டர்பிரைசஸ்-ஆக மாற்றப்பட்டிருக்கின்றன. கம்யூ னிஸ்ட் கட்சி கட்டுப்பாடான கட்சியாக இருந்த போதிலும், கட்சிக்குள் ஜனநாய கம் இல்லை என்கிற கருத்துப் பரவலாக இருக்கிறது. உண்மையில், ஜனநாயக மத்தியத்துவத்தை நடைமுறையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிற மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்கட்சி ஜனநாயகத்தைச் சிறந்தமுறையில் பின் பற்றி வருகிறது. உள்கட்சி ஜனநாயகத் தைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய சில போக்குகளை பிளீனம் சுட்டிக்காட்டியது, அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளையும் பிளீனம் பரிந்துரைத்திருக்கிறது.வகுப்புவாதத்தை எதிர்த்துமுறியடிப் பது என்பது தேர்தல்களில் பாஜகவைத் தோற்கடிப்பது என்ற ஒரு தவறான அபிப்பிராயம் இருக்கிறது. தேர்தல் போராட்டம் மட்டுமே மதவெறி சக்திகளை பலவீனப்படுத்தி, தனிமைப்படுத்திவிடாது. ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் பல்வேறு விதமான பரிவாரங்களும் சமூகத்தின் பல்வேறு பிரிவினர் மத்தியிலும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. பாஜக தேர்தலில் தோல்வி அடைவதுமட்டுமே மக்கள் மத்தியில் ஊட்டப்பட்டு வரும் மதவெறி நஞ்சை அகற்றுவதற்குப் போதுமானதல்ல. இந்துத்வா சக்திகளை யும் மற்றும் வகுப்புவாதத்தின் பல்வேறு வடிவங்களையும் எதிர்த்து முறியடித்திட சித்தாந்தப் போராட்டங்களை நடத்த வேண்டியது முக்கியமாகும். மதவெறிக்கு எதிராக உறுதியுடன் போராடும் ஒரு கட்சி என்ற முறையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் மத்தியில் சித்தாந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு என்றே வலுவான ஓர் அமைப்பைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம். எனவே, மதவெறிக்கு எதிராகவும், மதச்சார்பற்ற, ஜனநாயக மாண்புகளைப் புகுத்திடக்கூடிய விதத்தில் சமூக, கலாச்சார மற்றும் கல்வித்துறைகளில் தலையிட்டு சமூக, கலாச்சார மற்றும் கல்வித்துறை களில் தலையிடவும் வேண்டி அறிவுஜீவி கள் மற்றும் கலாச்சார ஸ்தாபனங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான மேடையை உருவாக்குவதற்கான வழிவகைகளைக் கண்டறிவது குறித்தும் பிளீனம் விவாதித் தது. பிளீனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஸ்தாபனரீதியான கடமைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமல்படுத்துவ தன் மூலம், நாட்டில் ஒரு வலுவான இடதுமற்றும் ஜனநாயக மாற்றை நோக்கி முன்னேறுவதைத் தீர்மானித்திடும்.

 நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ், தில்லிப் பதிப்பு, 7-1-2016

தமிழில்: ச.வீரமணி
Source  http://www.thenee.com/130116/130116-1/130116-2/130116-3/130116-3.html

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...