எஸ்.எம்.எம்.பஷீர்
“கெட்ட மனிதர்கள்
மாத்திரமல்ல இனப்படுகொலைகள் செய்பவர்கள் நாங்கள் யாவரும் அவ்வாறு செய்ய இயலுமை
கொண்டவர்கள் . இதுவே எமது கூர்ப்பு வரலாறாகும்” - ஜேம்ஸ் லவ்லோக்
மஹிந்த ஆட்சிக்
காலத்தில் வட மாகாண சபை தேர்தலில் முன்னாள் நீதியரசர் ஒருவர் திடீரென்று அரசியல்
நுழைக்கப்பட்டார். அதுவரை காலம் கோலோச்சியிருந்த குறும் இனவாத தீவிர தமிழ்
அரசியலில் கொழும்பு மேட்டுக்குடி
பின்னணியைக் கொண்ட , அளப்பரிய சமய
இலக்கிய ஈடுபாடு கொண்ட; தனது
சந்ததிகளுக்கு சிங்கள திருமண உறவை ஏற்படுத்திக்கொண்ட; அனுபவமும் ஆளுமையும் கொண்ட ஒரு மிதவாதி எனப்படும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது "மாலைப்
பொழுது" அரசியல் வாழ்வில் ஒரு
திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளார்.
நேற்று வரை
மஹிந்த அரசின் ஆட்சி அதிகாரம்
கோலோச்சியிருந்த பொழுது வட மாகாணத்துக்கு கிடைக்க வேண்டிய சகல அதிகாரங்களும்
முழுமையாகத் தரப்படவில்லை , காணி
அதிகாரமில்லை , போலீஸ்
அதிகாரமில்லை , இராணுவ ஆளுனரை
அகற்ற வேண்டும் என்ற கோசங்கள் பலமாக இருந்தன. இந்த சூழலில்தான் மகிந்தவின் ஆட்சிக் கலைப்பும் மைத்ரீயின் எதிர்பாராத பிளவும் ஏற்பட்டது,
தமது எதிரியான மகிந்தவை வீழ்த்த அவருக்கு
எதிராக கூட்டமைத்த அரசியல் சக்திகளின்
மேற்குலக சார்பும் , அரசியல் முன்
மொழிவுகளும் , மொத்தத்தில்
மாற்றம் வேண்டி நின்ற மக்களுக்கு வழங்கிய சமிஞ்ஞைகள் என்பன தமிழ் தேசிய
கூட்டமைப்புக்கும் , தங்களின் அரசியல் நகர்வுகளுக்கான சந்தர்ப்பம்
இதுவென்று கட்டியம் கூறின.
சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல
கட்சிகளும் ஓரணி திரண்டதும் , ஜனாதிபதி
தேர்தலுக்கு முன்னர் கிழக்கு மாகாண சபையை ஒத்திவைக்கும் சூழ்நிலை ஏற்பட்டதும்
இன்னோரன்ன மாற்றங்கள் கூட்டமைப்பின் எதிர்கால நம்பிக்கைக்கு வலுவூட்டியது, குறிப்பாக வட மாகாண சபையின் கதவுகளை நாட்டில்
ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் அறைந்த தட்டின! ,
வட மாகாண சபையில்
கடந்த ஒரு வருடகாலமாக இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதை உறுதி செய்ய 17ஆம் திகதி 2014ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமை
ஆணையாளருக்கு வட மாகாண சபை உறுப்பினர்களும் , கிழக்கு மாகாண சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு
உறுப்பினர்களுமாக மொத்தம் 33 பேர்
கையொப்பமிட்டு அனுப்பியிருந்தனர். அந்தக் கடிதத்தில் இலங்கை அரசு ஐ நா
விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பதால் , தமிழ் நாட்டில் ஒரு விசாரணைக் குழு நியமிக்கவும் கோரி இருந்தனர்.
அது மாத்திரமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனப்படுகொலை பற்றிய வரைவுத்
தீர்மானங்கள் காட்டமாக உள்ளதாகவும் , அவற்றில்
திருத்தம் கொண்டு வரப்படல் வேண்டும் எனவும் ;
இலங்கை மீதான ஐ.நா விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கொண்டுவருவது பொருத்தம் என்றும் முன்னர் முடிவு எடுத்திருந்தனர் . ஆனால் இதையெல்லாம் தாண்டி முன்னாள் டெலோ
இயக்க சிவாஜிலிங்கம் இந்தத் தீர்மானத்தை கொண்டு வருவதில் விக்கிரமாதித்தனாக
செயற்பட்டுள்ளார். இவர் தமது இயக்கக் காரர்களை வட மாகாணத்தில் மிகக் கொடூரமாக புலிகள் கொன்றழித்த
(தமிழர்கள் தமிழர்களுக்கு இழைத்த மனித உரிமை மீறல்களை ) மறந்து புலிகளுடன் சமரசம் செய்து கொண்டவர்.
இன்று ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர் இன சக ஜீவிதத்துக்காக
வழங்கப்பட்ட மக்கள் ஆணையை முன்னெடுப்பதாக இலங்கை அரசு செயற்படும் பொழுது , அதிலும்
குறிப்பாக தமிழ் தரப்புக்கு வழங்கப்பட்ட
உள்நாட்டு நம்பகத்தகு யுத்தக் குற்ற விசாரணைகள் .வடக்கு கிழக்கில் உள்ள வாழ்வாதரா
காரணிகளை மீளக் கட்டி அமைத்தல் , பாதுகாப்பு வலயத்துக்காக
சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைத்தல் என்ற பல்வேறு அம்சங்களில் நம்பிக்கை
தரும் விதத்தில் செயற்படவிருப்பதாக சமிக்ஞைகளை வெளிப்படுத்திய நேரத்தில் இந்த
தீர்மானம் இலங்கை அரசுக்கும் "அலேர்ஜியை " ஏற்படுத்தி உள்ளது.
அரச மாற்றத்துக்கு அடிகோலிய அரசியல் பிரமுகர் என்ற வகையிலும் அரசின் பேச்சாளர்
என்ற வகையிலும் ராஜித செனிவிரத்ன இலங்கை
நடந்தது இனப்படுகொலை ஆகாது என்றும் முரண்பாட்டு வழிமுறைகளை தேர்வது முன்னோக்கிய
நகர்வுகளுக்கு முட்டுக் கட்டையாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இத்தீர்மானம்
குறித்து தன்னை சந்தித்த வந்த ஈ பீ டி. யினரிடம் ஜனாதிபதி மைத்ரீபால சிறிசேன , மாகாணசபை
தனது அதிகாரத்தை மீறி சென்றுவிட்டதாக, குறிப்பாக
இனப்படுகொலை என்ற குற்றச்சாட்டு குறித்து தனது கிலேசத்தை தெரிவித்துள்ளார்.
மறு புறத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கையேடு இலங்கை ஜனாதிபதியை மாகாண
சபை உறுப்பினர்களுடன் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய
விக்னேஸ்வரனை ( மகிந்த அழைத்தும் விக்னேஸ்வரன் சந்திக்க மறுத்தமையையும் இங்கு
ஞாபகப்படுத்த வேண்டி உள்ளது ) , அந்த
சந்திப்பின் பின்னர் தனிப்பட்ட முறையில் ஜனாதிபதியை சந்தித்து தீர்மானம்
சொல்லியதாக சில தகவல்கள் ஊடகங்களில்
வெளியாகி உள்ளன. " It is during this private discussion that Wigneswaran had
tried to explain the circumstances under which he moved the Genocide resolution
and got it passed by the Northern council. He assured the President that it was
not against Sirisena personally and that it was only a manifestation of the
mood of the Tamil people." இனப்படுகொலை
தீர்மானம் கொண்டுவர காரணமாகவிருந்த சூழ்நிலைகளைகளையும், அத்தீர்மானம்
அவருக்கு (மைத்ரீக்கு ) எதிராக கொண்டு
வரப்படவில்லை, தமிழ் மக்களின் உணர்வுகளின்
வெளிப்பாடே அத்தீர்மானம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மைத்ரி யுத்தத்தின்
இறுதிக் காலத்தில் மகிந்தவின் சிம்மாசனத்தில் இருந்து யுத்தம் நடத்தினார் என்று
தீர்மானத்தில் குற்றம் சாட்டிவிட்டு விக்னேஸ்வரன் மைத்ரீயுடன் " இது உங்களுக்கு எதிரானதல்ல"
என்றும் எம்மிருவருக்கும் எதிரியான மகிந்தவுக்கு எதிரானது என்று சொல்லி சிங்கள
ஜனாதிபதி மைத்ரீயை எப்படி விக்னேஸ்வரன் கை குலுக்கி
"சமாளித்திருக்கிறார்"
தொடரும் ...
No comments:
Post a Comment