கடந்த
18. 03. 2014 அன்று பாலமுனை பிரதேசத்தில் முஸ்லிம் தனிநபர் ஒருவருக்கு
சொந்தமான காணியில் தமிழ் நபர் ஒருவரின் சடலத்தை அடக்கம் செய்ய மண்முனை
பற்று பிரதேச செயலாளரின் அனுசரணையுடன் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
சம்பவத்தை அறிந்து ஸ்தலத்துக்கு விரைந்த
காணி உரிமையாளர் இந்த அநீதியை சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு நீதிமன்ற
உத்தரவுடன் தடுத்ததை அடுத்து இந்த திட்டமிட்ட இன வன்முறை தூண்டல்
முன்னகர்வு முறியடிக்கப்பட்டது.