எஸ்.எம்.எம்.பஷீர்
“நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்” ( உலகநாதர்)
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்” ( உலகநாதர்)
அண்மையில் கிழக்கு
மாகாணத்துக்குரிய உள்ளுராட்சி ஆணையாளராக
தகுதி வாய்ந்த அரச ஊழியரான எம்.வை.சலீம் எனும் முஸ்லிம் ஒருவரை இலங்கை அரசாங்கம்
நியமித்ததைப் பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலர் தங்களின் ஆட்சேபனையை கிழக்கு மாகாண ஆளுனருக்கு
கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் தேசியக் கிழக்கு மாகாண
சபை உறுப்பினர்கள் கிழக்கு மாகாண ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் சொல்லப்பட்ட விடயங்களில் "தமிழ் மக்களைப்
பொறுத்தவரையில் உள்ளூராட்சி என்ற விடயம் மிக முக்கியமானது என்பதை குறிப்பிட்டு வேறு சமூகத்தவரை (முஸ்லிம்
அல்லாத ஒருவரை) நியமிப்பது அல்லது பதவியில் உள்ள உள்ளூராட்சி ஆணையாளரின் பதவியை
நீடிப்பது " தங்களின் கோரிக்கையாகும் என்பதை வலியுறுத்தி இருந்தனர்.