வட மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பாக இலண்டனில் Froud Centreல் 11 அக்டோபர் 1998 ல் நடத்தப்பட்ட கூட்டத்தின் புகைப்படங்கள்
படத்தில் : அஹமட் , .பாரூக் , சித்தீக் , . ஈஸ்ட்ஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசன் , கலாநிதி ஹஸ்புல்லாஹ்
படத்தில் : பஷீர், கலாநிதி ,ஹஸ்புல்லாஹ் உரையாற்றுகிறார்
படத்தில்: பார்வையாளர்கள்
இலங்கையில் இஸ்லாமிய மக்கள் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பது முற்றிலும் உண்மையான விடயமே. ஆனால் அவர்கள் ஒட்டுமொத்தமாக தமிழ்மக்களனைவராலும் வஞ்சிக்கப்படவில்லை. அதற்கு ஒரு நல்ல உதாரணம் மன்னாரில் 1960, 70களில் திருவாளர் றஹிம் அவர்கள் இரு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார். அக்காலத்தில் மூன்று மதங்களை சார்ந்த மக்களும் தமிழர்கள் என்ற ஒரே குடையின் கீழ்தான் வாக்களித்தார்கள். அப்பொழுது புலிகள் இருக்கவில்லை.ஆனால் முதல் முறையாக 1988ம் ஆண்டு தை மாதம் 11ம் திகதி இரவு பத்து மணியளவில் அச்சமயம் மன்னாரில் அரசாங்க அதிபராக பணியாற்றிக்கொண்டிருந்த இஸ்லாமியரான திரு. மக்பூல் என்பவர் தாறாபுரம் கிராமத்தில் வைத்து புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது வடமாகணம் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்தது. இதற்கு மன்னார் மக்கள் எவருமே பொறுப்பல்ல. புலிகள் மட்டுமே இத்துர்ப்பாக்கிய சம்பவத்திற்கு பொறுப்பாளிகளாவர். ஆனால் 1990 ஐப்பசியில் முஸ்லிம் மக்களை புலிகள் பலவந்தமாக வெளியேற்றிய விடயத்தில் அன்றைய யு.என்.பி.அரசுக்கும், ஐ.நா.வின் அகதிகளுக்கான அமைப்பிற்கும் ஆழமான தொடர்பு இருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
ReplyDelete