இலங்கையில் ராஜபக்சேவிற்கு ஆதராவாக பிஜே பிரச்சாரம் செய்தாரா ?

புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் ப.ஜ.க சார்பாக கலந்துகொண்ட ராகவன் என்பவர் பேசும்போது இலங்கை தேர்தலில் ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் பி.ஜே பிரச்சாரம் செய்து விட்டு இப்போது ஆர்பாட்டம் செய்கின்றார் என்ற குற்றச்சாட்டை உங்கள் மீது வைத்துள்ளாரே?
- கடையநல்லூர் மசூது
பதில்:- சந்திரிகா அவர்கள் இலங்கையில் பிரதமராக இருந்த போது 2005 ஆம் ஆண்டு நான் இலங்கை சென்றேன். அங்கே பல ஊர்களில் பிரச்சாரம் செய்தேன். கடைசியாக தலைநகர் கொளும்புவில் முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் வகையில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


இலங்கை மக்களை மதம் மாற்றம் செய்யும் நிகழ்ச்சி நடத்துவதாக சமாதி வழிப்பாட்டுக்காரர்களும், தரீக்காவாதிகளும், தவ்ஹீத் போர்வையில் அரபு நாடுகளில் பணம் (பறிக்கும்) இயக்கங்களும் புகார்களுக்கு மேல் புகார்கள் அனுப்பி அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்தனர். எனது விசாவையும் கேன்சல் செய்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினார்கள். 
சந்திரிகா ஆட்சி அதன் பின் தொடர்ந்த போதும், அடுத்து வந்த தேர்தலின் போதும், தேர்தலுக்குப் பின் ராஜபக்சே அதிபராக தேர்வு செய்யப்பட்டபோதும்,  இன்று வரையும் நான் இலங்கை செல்லவில்லை.
இலங்கைத் தேர்தலின் போது நான் இலங்கை செல்லவில்லை எனும் போது ராகவன் என்பவர் இலட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் மீடியாவில் இப்படி புளுகியதில் எனக்கு ஆச்சிரியம் இல்லை.
கூச்சம், வெட்கம் இல்லாமல் துணிந்து பொய் சொல்வது தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஆரம்பப்  படியாகும். முஸ்லிம்கள் தொடர்பாக எந்த அளவுக்கும் பொய் சொல்லலாம் என்பதே ஆர்.எஸ்.எஸ் காரர்களின் கொள்கையாக உள்ளதால் இதில் வியப்படைய ஒன்றும் இல்லை.
நான் இலங்கை சென்றேனா இல்லையா? ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேனா என்ற விபரம் அவருக்குத் தெரியாமல் எவனோ புளுகியதை நம்பி இப்படி சொல்லி இருப்பார் என்று சமாதானம் அடைய முடியாது. எவனோ புளுகினாலும் கொஞ்சம் மூளை இருந்தாலே இது பொய் என்று அறிந்து கொள்ள முடியும். எந்த ஒரு நாடாக இருந்தாலும் மற்ற நாட்டுக்காரர்கள் தேர்தலில் வாக்களிப்பதையும், பிரச்சாரம் செய்வதையும் சட்டம் அனுமதிக்காது. இந்தியனாகிய நான் இலங்கை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக எவனாவது இந்த ராகவனிடம் சொன்னாலும் பொது அறிவு இருந்தால் அதை அவர் நிராகரித்து இருக்க வேண்டும்.
மனமறிந்து தனது கொள்கைப்படி ராகவன் பொய் சொல்லி இருக்க வேண்டும். அல்லது எவனோ சொன்னதை நம்பி அதைக் கூறி இருந்தால் அவருக்கு பொது அறிவு இல்லை என்பது உறுதி.
ராகவனுக்குச் சொன்ன அதே இரண்டு தன்மைகளும் ராகவனை விட அதிகமாக தமுமுக ஹாஜா கனியிடம் உள்ளன.
இலங்கையில் இருந்து விசா கேன்சல் செய்யப்பட்டு இந்தியாவுக்கு நான் திருப்பி அனுப்பப்ட்ட விபரம் தமுமுக வினருக்குத் தெரியும். பி.ஜே இனிமேல் ஒருக்காலும் இலங்கை செல்ல முடியாது என்று தமுமுகவினர் பரவலாக பிரச்சாரம் செய்து வந்தனர். அப்படி இருக்கும் போது நான் இலங்கை செல்லவில்லை ராஜபக்சேவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவில்லை என்பது ராகவனை விட தமுமுக வினருக்கு (தெளிவாகத்) தெரியும்.
ஆனாலும் அதை மெய்ப்பிப்பது போன்று இவர்கள் நடக்கிறார்கள் என்றால் பொய்யுடன் அயோக்கியத்தனமும் செய்கிறார்கள் என்பது தெரிகிறது.
ஒரு நாட்டைச் சேர்ந்தவர் இன்னொரு நாட்டில் எப்படி தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியும் என்ற கேள்வியை இவர் கேட்டு இருந்தால் கொஞ்சமாவது இவருக்கு பொது அறிவு உள்ளது என்பதை மக்கள் நினைப்பார்கள்.
ஆர்.எஸ்.எஸ் ஸை விட கூமுட்டைகளாக இருப்பவர்கள் தான் தமுமுகவினர் என்பதை அவர்களே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டனர்.
அடுத்ததாக இன்னொரு விஷயத்தையும் நான் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. ராஜபக்சே இரண்டாம் முறை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட போது அவர் வெற்றி பெறுவது சந்தேகம் என்ற நிலை இருந்தது. ராணுவத் தளபதி பொன்சேகா அவரை எதிர்த்து போட்டியிடுவதால் ராஜபக்சே ஜெயிக்க மாட்டார் என்ற கருத்து நிலவியது.
அப்போது ராஜபக்சே கட்சியின் பிரமுகர்கள் சிலர் இலங்கையில் நமது ஜமாஅத்தை அனுகினார்கள். பிஜேயும், ராஜபக்சேவும் கலந்து கொள்ளக் கூடிய ஒரு நிகழ்ச்சிக்கு பிஜேவை அழைத்து வாருங்கள். அதன் மூலம் முஸ்லிம்களின் வாக்குகள் எங்களுக்குக் கூடுதலாக கிடைக்கும் என்று அனுகினார்கள்.
என்னிடம் இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தினர் இதைக் கூறிய போது நிர்வாகக் குழுவைக் கூட்டி இதை ஏற்க இயலாது என்று தெரிவித்து விட்டோம்.
ஏதாவது பொது நிகழ்ச்சியில் நானும், ராஜபக்சேவும் கலந்து கொள்ளவேண்டும் என்றுதான் கோரினார்கள். அதையும் நாம் மறுத்து விட்டோம்.
தமுமுக வினர் ஒருக்காலும் திருந்த மாட்டார்கள் என்பதும் நமக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்குக் கூட சப்போட் பன்னக் கூடியவர்கள் என்பதும் மேலும் உறுதியாகின்றது என்பதை மட்டும் சமுதாயத்துக்கு சொல்லிக்கொள்கிறோம்.
மூலம் :http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/pj-precharam-ilangai-rajabekshe/#.U7gjbfldVlI

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...