தொகுப்பு ஜெயபாலன்
தற்போதைய சமாதான நடவடிக்கைகளில்முஸ்லிம்களின் நிலை என்ன என்பது பற்றியும் முஸ்லிம் தமிழ் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு பற்றியுமான சந்திப்பும் கலந்துரையாடலும் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் சமூகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. டிசம்பர் 7ம்திகதி (2003) மனோர்பார்க் போர்ட் சென்ரரில்இடம்பெற்ற இக்கூட்டத்திற்குபேராசிரியர் ஜனாப் எம்.வை.எம்.சித்தீக் தலைமை தாங்கினார். எஸ்.எம்.பாரூக், சட்டவல்லுனர் எஸ்.எம்.எம். பசீர் , ஜலால்தீன் தேசம் ஜெயபாலன் ஆகியோர் இதில் உரையாற்றினர் . சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஆலோசகராகக் கலந்து கொண்ட எம்.ஐ.எம். மொய்தீன் இச்சந்திப்பில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு இலங்கைச் சமாதானப் பேச்சுக்களும் முஸ்லிம்களின் நிலையம் என்பது பற்றிப் விளக்கினார்.கூட்ட முடிவில் கலந்துரையாடலும் இடம் பெற்றது.