ஓகஸ்ட் 28ல் அமீர் நினைவுச் சொற்பொழிவு லண்டன் இந்தியன் வை .எம்.சி.ஏ இல் நடைபெற்றது.இந்தியாவில் இருந்து வந்திருந்த குமரி ஆனந்தன் , அன்றூ லவ் , ஆனந்தசங்கரி, என்பவர்கள் உரை நிகழ்த்தினர் .அன்றூ லவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். Dr .நிக்கலஸ்பிள்ளையின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 200ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Dr. சிறிநிவாசன் மங்கள விளக்கி ஏற்றி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. பின்பு Dr . பாலா, சட்டத்தரணி பஷீர் , வாகீஸ் , ஆய்வாளர் சிவலிங்கம் ,திருமதி மங்கயற்கரசி ஆகியோர் உரையாற்றினர் குமரி ஆனந்தன் பேசுகையில் இலங்கை மக்களின் இன்னல்களை தான் கருணாநிதிக்கும் , சோனியாகாந்திக்கும், தனிப்பட்ட முறையில் விளக்கி அவர்கள் மூலம் இலங்கை இனப்பிரச்சினையை தீர்க்க உதவுவதாக உறுதியளித்தார் . அன்றூ லவ்வும் பாராளுமன்றத்தில் இலங்கைப்
பிரச்சினையை எடுத்துச் சொல்வதாக கூறினார்.
No comments:
Post a Comment